முகப்பு
தமிழ்நாடு

விழுப்புரம் மாவட்டத்தில் பொங்கல் பரிசு தொகுப்பு: அமைச்சர் சிவி சண்முகம் வழங்கி தொடங்கி வைத்தார்

விழுப்புரம் மாவட்டத்தில் பொங்கல் பரிசு தொகுப்புகளை தமிழக சட்டத்துறை அமைச்சர் சிவி சண்முகம் வழங்கி தொடங்கி வைத்தார்.

Updated On : 1 ஜனவரி 2021, 1:48 pm IST
விழுப்புரம் மாவட்டத்தில் பொங்கல் பரிசு தொகுப்புகளை வழங்கிய தமிழக சட்டத்துறை அமைச்சர் சிவி சண்முகம்.
பகிர்:


விழுப்புரம் மாவட்டத்தில் பொங்கல் பரிசு தொகுப்புகளை தமிழக சட்டத்துறை அமைச்சர் சிவி சண்முகம் வழங்கி தொடங்கி வைத்தார்.

தமிழகத்தில் வரும் பொங்கல் பண்டிகைக்காக அரசு சார்பில் குடும்ப அட்டைதாரர்களுக்கு ரூ.2,500 ரொக்கம் மற்றும் கரும்பு, சக்கரை, ஏலக்காய், திராட்சை உள்ளிட்ட பரிசுகள் வழங்கப்படுகிறது.

இந்த வகையில் விழுப்புரம் மாவட்டத்தில் 5.86 லட்சம் லட்சம் குடும்ப அட்டைதாரர்களுக்கு பரிசு தொகுப்புகள் வழங்கப்படுகிறது.

Advertisement

Advertisement

விழுப்புரம் பகுதியில் வெள்ளிக்கிழமை தொடங்கிய நிகழ்ச்சியில் அமைச்சர் சிவி சண்முகம் பங்கேற்று பொங்கல் பரிசு தொகுப்புகளை பொதுமக்களுக்கு வழங்கி தொடங்கி வைத்தார்.

மாவட்ட ஆட்சியர் அண்ணாதுரை, காவல் கண்காணிப்பாளர் ராதாகிருஷ்ணன், மாவட்ட வருவாய் அலுவலர் சரஸ்வதி மற்றும் அதிகாரிகள் பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.

தொடர்ந்து இன்று முதல் நியாயவிலைக் கடைகளில் பரிசுத்தொகை வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்காக மாவட்டத்தில் ரூ.156 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளதாக தெரிவித்துள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments