ஏற்காடு செல்ல முயன்ற சுற்றுலா பயணிகள் திருப்பி அனுப்பி வைப்பு
புத்தாண்டை முன்னிட்டு ஏற்காடு செல்ல முயன்ற சுற்றுலாப் பயணிகள், அடிவார சோதனைச் சாவடியில் திருப்பி அனுப்பி வைக்கப்பட்டனர்.
சேலம்: புத்தாண்டை முன்னிட்டு ஏற்காடு செல்ல முயன்ற சுற்றுலாப் பயணிகள், அடிவார சோதனைச் சாவடியில் திருப்பி அனுப்பி வைக்கப்பட்டனர்.
சேலம் மாவட்டத்தில் கரோனா வைரஸ் நோய் தடுப்பு நடவடிக்கையின் தொடர்ச்சியாக ஏற்காட்டில் உள்ள சுற்றுலா தலங்களான அண்ணா பூங்கா, தாவரவியல் பூங்கா மற்றும் படகு இல்லம் உள்ளிட்ட ஏற்காடு சுற்றுலா தலங்கள் டிச.31 மாலை முதல் ஜன.2 மாலை வரை மூடப்படுகிறது.
மேற்குறிப்பிட்ட இடங்களுக்கு சுற்றுலாப் பயணிகள் செல்ல வேண்டாம் மாவட்ட சுற்றுலா அலுவலர் வெ. ஜெனார்த்தனம் தெரிவித்திருந்தார்.
Advertisement
Advertisement
இந்தநிலையில் புத்தாண்டையொட்டி கார்கள், இரு சக்கர வாகனங்களில் ஏற்காடு செல்ல வந்த சுற்றுலாப் பயணிகளை அடிவாரத்தில் உள்ள சோதனைச் சாவடியில் நிறுத்தி காவலர்கள் திருப்பி அனுப்பினர்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.