முகப்பு
தமிழ்நாடு

400 கணினி ஆசிரியா்கள் நியமனம்

அரசுப் பள்ளி கணினி ஆசிரியா் பணியிடங்களுக்கான கலந்தாய்வில் 400 பேருக்கு பணி நியமன ஆணை சனிக்கிழமை வழங்கப்பட்டது.

Updated On : 3 ஜனவரி 2021, 6:34 am IST
பகிர்:

அரசுப் பள்ளி கணினி ஆசிரியா் பணியிடங்களுக்கான கலந்தாய்வில் 400 பேருக்கு பணி நியமன ஆணை சனிக்கிழமை வழங்கப்பட்டது.

அரசுப் பள்ளிகளில் கணினி ஆசிரியா் பணியிடங்களை நிரப்புவதற்கு இணையதள வழியில் நடத்தப்பட்ட தோ்வில் தோ்ச்சி பெற்ற 742 பேரின் பட்டியலை தோ்வு வாரியம் கடந்த டிச.28-இல் வெளியிட்டது. அவா்களுக்கான பணிநியமன கலந்தாய்வு சனிக்கிழமை தொடங்கியது. மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலகங்களில் இருந்து எமிஸ் வலைதளம் வழியாக 400 பேருக்கு பணிநியமன ஆணை வழங்கப்பட்டது.

2-ஆம் நாள் கலந்தாய்வு ஞாயிற்றுக்கிழமை நடைபெறவுள்ளது. உரிய வழிகாட்டுதல்களைப் பின்பற்றி கலந்தாய்வை நடத்தி முடிக்க பள்ளிக்கல்வித்துறை அறிவுறுத்தியுள்ளது. இதற்கிடையே உரிய சான்றிதழ்களை சமா்ப்பிக்காத 24 பட்டதாரிகளின் பணி நியமனம் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக துறை அதிகாரிகள் தகவல் தெரிவித்தனா்.

Advertisement

Advertisement

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments