தில்லி மாநில அரசு உருவாகியுள்ள தமிழ் அகாடமி: ஸ்டாலின் மகிழ்ச்சி
தில்லி மாநில அரசு உருவாகியுள்ள தமிழ் அகாடமி குறித்து திமுக தலைவர் ஸ்டாலின் மகிழ்ச்சி தெரிவித்துள்ளார்.
சென்னை: தில்லி மாநில அரசு உருவாகியுள்ள தமிழ் அகாடமி குறித்து திமுக தலைவர் ஸ்டாலின் மகிழ்ச்சி தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் திங்களன்று தனது முகநூல் பக்கத்தில் பதிவிட்டுள்ளதாவது:
டெல்லி மாநில அரசு தமிழ் அகாடமி அமைத்திருப்பதை அறிந்து மகிழ்ச்சியடைகிறேன்.
Advertisement
Advertisement
பரஸ்பர கலாச்சாரத் தொடர்புகளை வளர்க்கவும், தமிழ்ப் பண்பாட்டை வெளிப்படுத்தவும் இது உதவும்.
இதனை முன்னெடுத்திருக்கும் முதலமைச்சர் திரு. அரவிந்த் கெஜ்ரிவால் மற்றும் துணை முதலமைச்சர் திரு. மணீஸ் சிசோடியா ஆகியோருக்கு தி.மு.கழகத்தின் சார்பில் எனது பாராட்டுகளையும், வாழ்த்துகளையும் தெரிவித்துக் கொள்கிறேன்.
இவ்வாறு அவர் பதிவிட்டுள்ளார்.