பெருமாநல்லூர் அருகே 36 பேருக்கு இலவச வீட்டுமனைப் பட்டாக்கள்
பெருமாநல்லூர் அருகே கணக்கம்பாளையம் தியாகி குமரன் காலனி பகுதியில், 36 பயனாளிகளுக்கு இலவச வீட்டுமனைப் பட்டாக்களை திருப்பூர் வடக்கு பேரவை உறுப்பினர் கே.என்.விஜயகுமார் வழங்கினார்.
அவிநாசி: பெருமாநல்லூர் அருகே கணக்கம்பாளையம் தியாகி குமரன் காலனி பகுதியில், 36 பயனாளிகளுக்கு இலவச வீட்டுமனைப் பட்டாக்களை திருப்பூர் வடக்கு சட்டப் பேரைவ உறுப்பினர் கே.என்.விஜயகுமார் வியாழக்கிழமை மாலை வழங்கினார்.
திருப்பூர் ஒன்றியம் கணக்கம்பாளையம் ஊராட்சிக்கு உள்பட்ட குமரன் காலனியில் பொதுமக்களின் நீண்ட கால கோரிக்கையாக இலவச வீட்டுமனைப் பட்டா 36 பயனாளிகளுக்கு சட்டப்பேரைவ உறுப்பினர் கே.என்.விஜயகுமார் வழங்கினார். ஒன்றியக் குழுத் தலைவர் சொர்ணாம்பாள் பழனிசாமி, மாவட்டக் குழு உறுப்பினர் சாமிநாதன், ஒன்றியக் குழு உறுப்பினர்கள் சங்கீதா சந்திரசேகர், ஜஸ்வர்யா மகாராஜ், ஊராட்சி மன்றத் தலைவர் சண்முகசுந்தரம், பொறுப்பாளர்கள் சௌந்தர்ராஜன், மேக்னம் பழனிசாமி, வருவாய்த்துறையினர் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.