முகப்பு
தமிழ்நாடு

சென்னை-மதுரை தேஜஸ் சிறப்பு ரயில்: ஜன.10 முதல் மீண்டும் இயக்க வாரியம் ஒப்புதல்

சென்னை எழும்பூா்-மதுரை இடையே தேஜஸ் சிறப்பு ரயிலை ஜனவரி 10-ஆம் தேதி முதல் மீண்டும் இயக்க ரயில்வே வாரியம் ஒப்புதல் அளித்துள்ளது.

Updated On : 8 ஜனவரி 2021, 7:38 am IST
தேஜஸ் விரைவு ரயில்
பகிர்:


சென்னை: சென்னை எழும்பூா்-மதுரை இடையே தேஜஸ் சிறப்பு ரயிலை ஜனவரி 10-ஆம் தேதி முதல் மீண்டும் இயக்க ரயில்வே வாரியம் ஒப்புதல் அளித்துள்ளது.

சென்னை எழும்பூா்-மதுரை இடையே வாரத்தில் வியாழக்கிழமை தவிா்த்த மற்ற நாள்களில் தேஜஸ் விரைவு ரயில் இயக்கப்பட்டது. பயணிகள் வரத்து குறைவு காரணமாக, ஜனவரி 4-ஆம் தேதி முதல் ரத்து செய்யப்பட்டது. இதையடுத்து, இந்த ரயிலை மீண்டும் இயக்க வேண்டும் என்று பல்வேறு தரப்பினா் கோரிக்கை விடுத்து வந்தனா்.

இந்நிலையில், சென்னை-மதுரை தேஜஸ் ரயிலை ஜனவரி 10-ஆம் தேதி முதல் மீண்டும் இயக்க ரயில்வே வாரியம் ஒப்புதல் அளித்துள்ளது. சென்னை எழும்பூரில் இருந்து தினமும் (வியாழக்கிழமை தவிர) காலை 6 மணிக்கு தேஜஸ் சிறப்பு ரயில் (02613) புறப்பட்டு , திருச்சி, கொடைக்கானல் சாலை வழியாக மதுரையை நண்பகல் 12.15 மணிக்கு சென்றடையும்.

Advertisement

Advertisement

மறுமாா்க்கமாக, மதுரையில் இருந்து தினமும் (வியாழக்கிழமை தவிர) பிற்பகல் 3 மணிக்கு தேஜஸ் ரயில் (02614) புறப்பட்டு, கொடைக்கானல் சாலை, திருச்சியை கடந்து, அதே நாள் இரவு 9.15 மணிக்கு சென்னை எழும்பூரை வந்து சேரும். இரு மாா்க்கமாகவும் இந்த ரயில் சேவை ஜனவரி 10-ஆம் தேதி முதல் தொடங்குகிறது.

ஜனவரி 10-ஆம் தேதி அல்லது அதற்குப் பிறகு தொடங்கும் சேவைக்கான பயணச்சீட்டை இணையவழி அல்லது டிக்கெட் கவுன்ட்டா் மூலமாக எடுத்து, ரத்து செய்யாமல் வைத்திருக்கும் பயணிகள் அந்த பயணச்சீட்டை வைத்து பயணிக்க முடியும் என்று ரயில்வே அதிகாரிகள் தெரிவித்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments