காங்கிரஸுக்கு எவ்வளவு இடம் என்பதை ஸ்டாலின் முடிவு செய்வார்: மணி ஷங்கர் ஐயர்
தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் காங்கிரஸுக்கு எத்தனை இடம் என்பதை திமுக தலைவர் மு.க. ஸ்டாலின்தான் முடிவு செய்வார் என்று காங்கிரஸ் தலைவர் மணி ஷங்கர் ஐயர் தெரிவித்துள்ளார்.
தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் காங்கிரஸுக்கு எத்தனை இடம் என்பதை திமுக தலைவர் மு.க. ஸ்டாலின்தான் முடிவு செய்வார் என்று காங்கிரஸ் தலைவர் மணி ஷங்கர் ஐயர் தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் 2021 மே மாதத்தில் சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற உள்ளது. இதையடுத்து அதிமுக, திமுக உள்ளிட்ட கட்சிகள் தீவிரப் பிரசாரத்தில் இறங்கியுள்ளன.
அதிமுகவில் முதல்வர் வேட்பாளர், கூட்டணி, சசிகலா விடுதலை என சர்ச்சைகள் எழுந்துள்ள நிலையில் திமுக தலைமையிலான கூட்டணியில் காங்கிரஸ் கட்சிக்கு எவ்வளவு இடம் என்பது குறித்து காங்கிரஸ் தலைவர் மணி ஷங்கர் ஐயர் தெரிவித்துள்ளார்.
Advertisement
Advertisement
அதன்படி, 'சட்டப்பேரவைத் தேர்தலில் காங்கிரஸுக்கு எவ்வளவு இடங்கள் என்பதை ஸ்டாலின்தான் முடிவு செய்வார். எங்களுக்கு வழங்கப்படுவதை நாங்கள் முழுமனதோடு ஏற்றுக்கொள்வோம். எனினும் மயிலாடுதுறை சட்டப்பேரவைத் தொகுதி காங்கிரஸுக்கு வழங்கப்பட வேண்டும் என்ற கோரிக்கையை பேச்சுவார்த்தையில் முன்வைப்பேன். ஏனெனில் திமுக அங்கு ஒருமுறை கூட வெற்றி பெற்றதில்லை. ஆனால், முன்னதாக காங்கிரஸ் வெற்றி வேட்பாளர் அங்கு இருந்தார். எண்ணிக்கையில் மாற்றம் இருக்க வாய்ப்பில்லை, ஆனால், ஒரு சில இடங்களில் மாற்றம் இருக்கும்' என்று தெரிவித்தார்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.