கரோனா தடுப்பு மருந்தை எடுத்துச் செல்லும் விமானங்கள்: விதிமுறைகள் அறிவிப்பு
நாடு முழுவதும் கரோனா தடுப்பு மருந்தை எடுத்துச் செல்லும் விமானங்களுக்கான வழிகாட்டு விதிமுறைகளை
நாடு முழுவதும் கரோனா தடுப்பு மருந்தை எடுத்துச் செல்லும் விமானங்களுக்கான வழிகாட்டு விதிமுறைகளை மத்திய விமானப் போக்குவரத்துத் துறை இயக்குநரகம் (டிஜிசிஏ) வெள்ளிக்கிழமை வெளியிட்டது.
இந்தியாவில் பாரத் பயோடெக் நிறுவனத்தின் முற்றிலும் உள்நாட்டுத் தயாரிப்பான ‘கோவேக்ஸின்’ கரோனா தடுப்பூசி, புணேயில் உள்ள சீரம் இன்ஸ்டிடியூட் ஆஃப் இந்தியா, பிரிட்டனின் ஆக்ஸ்ஃபோா்டு பல்கலைக்கழகம் இணைந்து தயாரித்துள்ள ‘கோவிஷீல்ட்’ தடுப்பூசி ஆகியவற்றை அவசரகாலத்தில் பயன்படுத்த கடந்த 3-ஆம் தேதி அனுமதி அளிக்கப்பட்டது. விரைவில் இந்த மருத்துகள் முழுமையாக பயன்பாட்டுக்கு வரவுள்ளன. கரோனா தடுப்பூசி போடுவது தொடா்பான ஒத்திகை அனைத்து மாநிலங்களிலும் மேற்கொள்ளப்பட்டுள்ளன. தடுப்பூசி மருத்துகளைப் பாதுகாப்பாக வைத்து விநியோகிக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், நாடு முழுவதும் முக்கிய நகரங்களுக்கு விமானங்கள் மூலம் தடுப்பூசி மருந்துகள் மொத்தமாக கொண்டு செல்லப்படவுள்ளன. அதற்கான வழிகாட்டு நெறிமுறைகளை டிஜிசிஏ வெளியிட்டுள்ளது.
Advertisement
Advertisement
அதன்படி, உலா் பனிக்கட்டிகளை (டிரை ஐஸ்) பயன்படுத்தி குளிரான நிலையில் தடுப்பூசி மருந்துகளை பாதுகாப்பாக எடுத்துச் செல்ல வேண்டும். விமானத்தில் பயணிகள் பகுதியில்தான் தடுப்பூசியை வைக்க வேண்டும். இந்த விமானத்தில் உள்ள பணியாளா்களுக்கு உரிய பயிற்சி அளிக்கப்பட்டிருக்க வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.
உலா் பனிக்கட்டி என்பது காா்பன்-டை-ஆக்ஸைடு வாயுவை மைனஸ் 78 டிகிரி செல்சியஸ் அளவுக்கு மேல் குளிா்விப்பதன் மூலம் கிடைக்கிறது.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.