கந்தர்வகோட்டையில் விஜய் மக்கள் இயக்கம் சார்பில் ரத்ததான முகாம்
புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டை அருகில் உள்ள மருங்கூரணியில் விஜய் மக்கள் இயக்கம் மற்றும் வெள்ளாளவிடுதி ஆரம்ப சுகாதார நிலையம் இணைந்து நடத்திய மாபெரும் ரத்ததான முகாம் சனிகிழமை நடைபெற்றது.
புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டை அருகில் உள்ள மருங்கூரணியில் விஜய் மக்கள் இயக்கம் மற்றும் வெள்ளாளவிடுதி ஆரம்ப சுகாதார நிலையம் இணைந்து நடத்திய மாபெரும் ரத்ததான முகாம் சனிகிழமை நடைபெற்றது.
ரத்ததான முகாமிற்கு விஜய் மக்கள் இயக்க மாவட்ட தலைவர் ஜெ. பர்வேஸ் தலைமை வகித்தார். இயக்கத்தின் ஒன்றிய தலைவர் பிரசாத், இளைஞரணி தலைவர் அரவிந்த் விஜய் , விஜய் மக்கள் இயக்கம் மன்ற நிர்வாகி அய்யாதுரை ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
முகாமில் விஜய் மக்கள் இயக்கம் நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் சுமார் 30 பேர் கலந்துகொண்டு ரத்ததானம் வழங்கினார். அதனைத் தொடர்ந்து நலிவுற்ற மாற்றுத்திறனாளிகளுக்கு ரூபாய் ஆயிரம் மதிப்பிலான பொங்கல் பொருள்கள் இலவசமாக வழங்கப்பட்டது.
Advertisement
Advertisement
மேலும், பேச்சுப்போட்டி கட்டுரைப்போட்டி விளையாட்டு போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு வழங்கப்பட்டது. முகாமில் தஞ்சை மருத்துவக்கல்லூரி மருத்துவர் ஜெயந்தி, புதுநகர் ஆரம்ப சுகாதார வட்டார மருத்துவ அலுவலர் சந்தோஷ், மருத்துவர் ஆனந்த், சுகாதார ஆய்வாளர்கள் முத்துக்குமார், நல்லமுத்து, திருநாவுக்கரசு உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.