முகப்பு
தமிழ்நாடு

ஊத்தங்கரை துப்புரவுப் பணியாளர்களுக்கு பொங்கல் பரிசு

கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை பேரூராட்சியில் பணியாற்றும் துப்புரவுப் பணியாளர்களுக்கு பொங்கல் பரிசு புடவைகள் மற்றும் இனிப்பு வழங்கும் நிகழ்ச்சி சனிக்கிழமை நடைபெற்றது. 

Updated On : 9 ஜனவரி 2021, 2:50 pm IST
பகிர்:

கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை பேரூராட்சியில் பணியாற்றும் துப்புரவுப் பணியாளர்களுக்கு பொங்கல் பரிசு புடவைகள் மற்றும் இனிப்பு வழங்கும் நிகழ்ச்சி சனிக்கிழமை நடைபெற்றது. 

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு த.மோகன்ராஜ், த.அசோக்குமார், திருப்பத்தூர் கு.ஸ்ரீதர், ஆண்கள் பள்ளி உதவி தலைமை ஆசிரியர் ஜேஆர்சி கு.கணேசன் ஆகியோர் ஊத்தங்கரை பேரூராட்சியில் பணியாற்றுகின்ற துப்புரவுப் பணியாளர்களுக்கு புடவைகள் மற்றும் இனிப்பு வழங்கினார்கள். 

இந்த நிகழ்ச்சியில் பனந்தோப்பு எஸ்.சக்திவேல், தொடக்கப் பள்ளி தலைமை ஆசிரியர் முருகன்,ஆசிரியர்கள் ர.சக்தி,ச.உமா, பேரூராட்சி மேஸ்திரி பெரியசாமி மற்றும் துப்புரவுப் பணியாளர்கள் கலந்து கொண்டனர். 

Advertisement

Advertisement

நிகழ்ச்சியில் கலந்துகொண்ட அனைவருக்கும் மாஸ்க் வழங்கப்பட்டது. கடந்த ஐந்து ஆண்டுகளாக பொங்கல் பண்டிகையை முன்னிட்டு துப்புரவுப் பணியாளர்களுக்குப் புத்தாடைகள் வழங்கி வருவதாக ஜேஆர்சி ஆசிரியர் கு‌கணேசன் கூறினார். புத்தாடைகள் வழங்கி நல்ல உள்ளங்களுக்கு துப்புரவுப் பணியாளர்கள் மகிழ்ச்சியுடன் நன்றியைத் தெரிவித்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments