முகப்பு
தமிழ்நாடு

சீர்காழி அருகே சாலை விபத்து: ஊர்க்காவல் படை வீரர் பலி, ஒருவர் காயம்

சீர்காழி அருகே பேருந்தை முந்த முயன்றபோது நிலை தடுமாறி கீழே விழுந்து ஊர்க்காவல் படை வீரர் பலியானார்.

Updated On : 9 ஜனவரி 2021, 3:54 pm IST
பகிர்:

சீர்காழி அருகே பேருந்தை முந்த முயன்றபோது நிலை தடுமாறி கீழே விழுந்து ஊர்க்காவல் படை வீரர் பலியானார். பின்னால் அமர்ந்து சென்றவர் படுகாயமடைந்து சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி தாலுக்கா நல்ல நாயகபுரம் கிராமத்தைச் சேர்ந்தவர் அருண் (22) ஊர்க்காவல் படை வீரர். இவர் இன்று நண்பகல் அதே ஊரைச் சேர்ந்த ராஜராஜன் (22) என்பவருடன் இருசக்கர வாகனத்தில் சென்றுள்ளார். 

வழியில் எடமணல் கிராமம் அருகே முன்னால் சென்ற அரசு பேருந்தை முந்த முயன்றபோது நிலைதடுமாறி கீழே விழுந்துள்ளனர். இதில் தலையில் படுகாயமடைந்த அருண் சம்பவ இடத்திலேயே பலியானார்.  பின்னால் அமர்ந்துசென்ற ராஜராஜன் படுகாயமடைந்து உயிருக்குப் போராடிக் கொண்டிருந்த நிலையில் அருகிலிருந்தவர்கள் அவரை மீட்டு சிகிச்சைக்காக ஆம்புலன்ஸ் மூலம் சீர்காழி அரசு மருத்துவமனைக்குக் கொண்டு வந்து சேர்த்தனர். அங்கு அவருக்குத் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. 

Advertisement

இதுகுறித்து தகவல் அறிந்த சீர்காழி காவல்துறையினர் சம்பவ இடத்திற்குச் சென்று உயிரிழந்த அருண் உடலைக் கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காக சீர்காழி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்ததுடன் விபத்து குறித்து விசாரணை மேற்கொண்டுள்ளனர். இச்சம்பவம் அப்பகுதி மக்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. 
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.