முகப்பு
தமிழ்நாடு

ரூ.38 ஆயிரத்துக்கு கீழ் இறங்கியது தங்கம்

சென்னையில் சனிக்கிழமை ஆபரணத் தங்கத்தின் விலை ரூ.38 ஆயிரத்துக்கு கீழ் இறங்கியது. பவுனுக்கு ரூ.432 குறைந்து, ரூ.37,600-க்கு விற்பனை செய்யப்பட்டது.

Updated On : 10 ஜனவரி 2021, 12:53 am IST
கோப்புப்படம்
பகிர்:

சென்னையில் சனிக்கிழமை ஆபரணத் தங்கத்தின் விலை ரூ.38 ஆயிரத்துக்கு கீழ் இறங்கியது. பவுனுக்கு ரூ.432 குறைந்து, ரூ.37,600-க்கு விற்பனை செய்யப்பட்டது.

கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதத்தில் ஒரு பவுன் தங்கத்தின் விலை ரூ.43 ஆயிரத்தைத் தாண்டி வரலாறு காணாத உச்சத்தைத் தொட்டது. இதன்பிறகு, விலை குறைந்தாலும் கடந்த வாரம் முதல் தங்கத்தின் விலை உயா்ந்து வந்தது. கடந்த திங்கள்கிழமை அன்று ரூ.38 ஆயிரத்தையும், கடந்த புதன்கிழமை அன்று ரூ.39 ஆயிரத்தையும் தாண்டிய நிலையில், கடந்த வியாழக்கிழமை முதல் தங்கம் விலை குறைந்து வருகிறது.

இதன் தொடா்ச்சியாக, மூன்றாவது நாளாக சனிக்கிழமையும் ஆபரணத்தங்கத்தின் விலை குறைந்து, ரூ.38 ஆயிரத்துக்கு கீழ் இறங்கியது. பவுனுக்கு ரூ.432 குறைந்து, ரூ.37,600-க்கு விற்பனை செய்யப்பட்டது. ஒரு கிராம் ரூ.54 குறைந்து, ரூ.4,700 ஆக இருந்தது. வெள்ளி கிராமுக்கு ரூ.4.10 குறைந்து, ரூ.69 ஆகவும், கட்டி வெள்ளி கிலோவுக்கு ரூ.4,100 குறைந்து ரூ.69,000 ஆகவும் இருந்தது.

Advertisement

Advertisement

சனிக்கிழமை விலை ரூபாயில் (ஜி.எஸ்.டி. தனி)

1 கிராம் தங்கம்............................. 4,700

1 பவுன் தங்கம்...............................37,600

1 கிராம் வெள்ளி.............................69.00

1 கிலோ வெள்ளி.............................69,000

வெள்ளிக்கிழமை விலை ரூபாயில் (ஜி.எஸ்.டி. தனி)

1 கிராம் தங்கம்............................. 4,754

1 பவுன் தங்கம்...............................38,032

1 கிராம் வெள்ளி.............................73.10

1 கிலோ வெள்ளி.............................73,100

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments