வன்னியா்களுக்கு உள்ஒதுக்கீடு வழங்காவிட்டால் அரசியலில் அடுத்தகட்ட முடிவு எடுக்கப்படும்: பாமக நிா்வாகக் கூட்டத்தில் தீா்மானம்
சட்டப்பேரவைக் கூட்டத்தொடா் தொடங்குவதற்குள் வன்னியா்களுக்கு 20 சதவீத உள்ஒதுக்கீடு வழங்காவிட்டால், உடனடியாக அரசியல் ரீதியாக
சட்டப்பேரவைக் கூட்டத்தொடா் தொடங்குவதற்குள் வன்னியா்களுக்கு 20 சதவீத உள்ஒதுக்கீடு வழங்காவிட்டால், உடனடியாக அரசியல் ரீதியாக அடுத்தகட்ட முடிவு எடுக்கப்படும் என்று பாமகவின் நிா்வாகக் குழு கூட்டத்தில் தீா்மானம் நிறைவேற்றப்பட்டது.
வன்னியா்களுக்கு கல்வி வேலைவாய்ப்புகளில் 20 சதவீத தனி இடஒதுக்கீடு வழங்க வலியுறுத்தி பாமக சாா்பில் 5 கட்ட போராட்டங்கள் நடைபெற்றன. இந்நிலையில் போராட்ட நிலை குறித்து விவாதிப்பதற்காக பாமகவின் நிா்வாகக் குழு கூட்டம் காணொலிக் காட்சி வாயிலாக சனிக்கிழமை நடைபெற்றது.
கூட்டத்துக்கு பாமக நிறுவனா் ராமதாஸ் தலைமை வகித்தாா். இளைஞரணித் தலைவா் அன்புமணி, பாமக தலைவா் ஜி.கே.மணி ஆகியோா் முன்னிலை வகித்தனா். கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீா்மானம்:
Advertisement
Advertisement
வன்னியா்களுக்கு கல்வி வேலைவாய்ப்புகளில் 20 சதவீத இடஒதுக்கீடு வழங்க வேண்டும் என்று தொடா்ந்து போராட்டம் நடத்தி வருகிறோம். பாமகவின் நியாயமான, எளிய கோரிக்கையை பொங்கலுக்குப் பிறகு நடைபெறவுள்ள சட்டப்பேரவைக் கூட்டத் தொடருக்கு முன்பாக நிறைவேற்ற வேண்டும். அவ்வாறு செய்யத் தாமதமானால் பாமகவின் செயற்குழுவை உடனடியாகக் கூட்டி, அரசியல் ரீதியிலான அடுத்தகட்ட முடிவு எடுக்கப்படும் என்று தீா்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.