வாழப்பாடியில் கராத்தே பயிற்சி பெற்ற மாணவர்களுக்கு சான்றிதழ்கள்
சேலம் மாவட்டம் வாழப்பாடியில் கராத்தே தற்காப்பு பயிற்சி பெற்ற மாணவ-மாணவிகளுக்கு சான்றிதழ் வழங்கும் விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
வாழப்பாடி: சேலம் மாவட்டம் வாழப்பாடியில் கராத்தே தற்காப்பு பயிற்சி பெற்ற மாணவ-மாணவிகளுக்கு சான்றிதழ் வழங்கும் விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
வாழப்பாடி காளியம்மன் நகர் பகுதியில், கராத்தே பயிற்றுநர் சதீஷ்குமார் தலைமையில் சசோட்டாகான் கராத்தே பயிற்சி நிறுவனத்தில் கீழ், முதுநிலை பயிற்சியாளர் சேலம் குப்புராஜ் வழிகாட்டுதலின்படி, நூற்றுக்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகளுக்கு பல்வேறு நிலைகளில் கராத்தே பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது.
பயிற்சி நிறைவு செய்து, தேர்வில் தேர்ச்சி பெற்ற மாணவ- மாணவியருக்கு, ஞாயிற்றுக்கிழமை காளியம்மன் கோவில் வளாகத்தில் சான்றிதழ் வழங்கும் விழா நடைபெற்றது.
Advertisement
Advertisement
முதுநிலை கராத்தே பயிற்சியாளர் சேலம் குப்புராஜ் தலைமையில் நடைபெற்ற இவ்விழாவில், நூற்றுக்கும் மேற்பட்ட மாணவ மாணவியருக்கு சான்றிதழ்களும், அங்கீகார வண்ண பட்டைகள் (பெல்ட்) வழங்கப்பட்டது.
நிறைவாக, நீல வண்ண பட்டை பெற்ற மாணவர் சிபிஅரசு நன்றி கூறினார்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.