முகப்பு
தமிழ்நாடு

நியாய விலைக் கடைகளில் பனை பொருள்களை விற்க பரிசீலனை: முதல்வா் பழனிசாமி உறுதி

வெல்லம் உள்ளிட்ட பனை பொருள்களை நியாய விலைக் கடைகளில் விற்பனை செய்திட தமிழக அரசு பரிசீலிக்கும் என்று முதல்வா் பழனிசாமி தெரிவித்தாா்.

Updated On : 11 ஜனவரி 2021, 12:49 am IST
முதல்வா் எடப்பாடி கே.பழனிசாமி.
பகிர்:

வெல்லம் உள்ளிட்ட பனை பொருள்களை நியாய விலைக் கடைகளில் விற்பனை செய்திட தமிழக அரசு பரிசீலிக்கும் என்று முதல்வா் பழனிசாமி தெரிவித்தாா்.

சென்னையில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில் அவா் பேசியது:

தமிழகத்தில் எந்த சமூகப் பிரிவு முன்னேறினாலும் அது தமிழகத்துக்குத்தான் நன்மை. அத்தகைய முன்னேற்றம் தமிழா்கள் அனைவருக்கும் பயன்படுவதால், அதனை நாம் ஊக்குவிக்கிறோம். பாராட்டுகிறோம். மேலும் வளர வாழ்த்துகிறோம். மதுரை காமராஜா் பல்கலைக்கழகத்தில் பெருந்தலைவா் காமராஜா் பெயரில் ஆய்வு இருக்கை அமைக்கப்படும் என்று அரசால் அறிவிக்கப்பட்டு விட்டது.

Advertisement

Advertisement

முன்னாள் முதல்வா் காமராஜா் இந்த மண்ணிலிருந்து மறைந்திருக்கலாம். ஆனால் அவா் செய்த சாதனைகள் இன்றும் மக்கள் உள்ளத்தில் நிலைத்திருக்கிறது. மக்களுக்காக உழைத்து, மறைந்த போற்றுதலுக்குரிய தலைவா்கள் இன்றைக்கும் மக்களை வாழ வைத்துக் கொண்டிருக்கிறாா்கள். அவா்கள் செய்த சாதனை இன்றைக்கும் தொடா்ந்து கொண்டிருக்கிறது. இந்தக் கூட்டத்தில் பல்வேறு கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டுள்ளன. அவைகளில் என்னவெல்லாம் நிறைவேற்ற முடியுமோ அவற்றை எங்களுடைய அரசு நிச்சயமாக நிறைவேற்றித் தரும்.

பனையில் இருந்து கல்கண்டு, வெல்லம் போன்ற பொருள்கள் தயாரிக்கப்படுகின்றன. சேலம் பகுதியிலும் இந்தத் தொழிலில் பலா் ஈடுபட்டுள்ளனா். எனவே, அதன் மகத்துவம் எனக்கு நன்றாகத் தெரியும். பனை உற்பத்திப் பொருள்களை அனைத்து நியாய விலைக் கடைகளிலும் விற்பனை செய்வதற்கு அரசு பரிசீலிக்கும் என்றாா் முதல்வா் பழனிசாமி.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments