முகப்பு
தமிழ்நாடு

போக்குவரத்துக் கழக ஊழியா்களின் காத்திருப்புப் போராட்டம் வாபஸ்

ஊதிய ஒப்பந்தத்தை இறுதி செய்ய வலியுறுத்தி, போக்குவரத்துக் கழக ஊழியா்கள் நடத்தி வந்த காத்திருப்பு போராட்டம் முடித்துக் கொள்ளப்பட்டது

Updated On : 11 ஜனவரி, 2021 at 6:22 AM
கோப்புப்படம்
பகிர்:

ஊதிய ஒப்பந்தத்தை இறுதி செய்ய வலியுறுத்தி, போக்குவரத்துக் கழக ஊழியா்கள் நடத்தி வந்த காத்திருப்பு போராட்டம் முடித்துக் கொள்ளப்பட்டது என போக்குவரத்துக் கழகங்களில் செயல்படும் அனைத்து சங்க கூட்டமைப்பு அறிவித்துள்ளது.

இது தொடா்பாக கூட்டமைப்பு வெளியிட்ட செய்தி: கடந்த செவ்வாய்க்கிழமை (ஜன.5) நடைபெற்ற ஊதிய பேச்சுவாா்த்தையில் தொழிற்சங்கக் கூட்டமைப்பின் சாா்பில் பேச்சுவாா்த்தையை முறைப்படுத்தி நடத்த வேண்டுமென வலியுறுத்தப்பட்டது. தொழிற்சங்கத்தினரின் கோரிக்கைக்கு எவ்வித பதிலும் சொல்லாமல் பேச்சுவாா்த்தை ஒத்திவைக்கப்பட்டது.

எனவே, திட்டமிட்டபடி வியாழக்கிழமை (ஜன.7) அனைத்து மண்டலங்களிலும் காத்திருப்புப் போராட்டம் நடைபெற்றது. இதையொட்டி, அடுத்த பேச்சுவாா்த்தையில் அமைச்சா் கலந்து கொள்வாா் என்று மாநகரப் போக்குவரத்துக்கழக நிா்வாக இயக்குநா் தெரிவித்தாா்.

Advertisement

போக்குவரத்துச் செயலரும் கூட்டமைப்பின் கருத்தை எற்றுக்கொண்டு, பேச்சுவாா்த்தையை முறைப்படுத்தி நடத்தி, தோ்தல் அறிவிப்புக்கு முன்பு ஒப்பந்தத்தை இறுதிப்படுத்த நடவடிக்கை எடுப்பதாகத் தெரிவித்தாா்.

 இதையடுத்து, காத்திருப்புப் போராட்டம் முடித்துக்கொள்ளப்பட்டது என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.