வீட்டுமனைப் பட்டா வழங்கக்கோரி சாலைகளில் ஆதார் அட்டையை வீசி போராட்டம்
திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகே உள்ள கல்லாபுரம் பகுதியில் இலவச வீட்டுமனைப்பட்ட வழங்கக்கோரி அப்பகுதி பொதுமக்கள் ஆட்சியர் அலுவலகம் முன்பாக ஆதார் அட்டைகளை வீசி திங்கள்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனர்.
திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகே உள்ள கல்லாபுரம் பகுதியில் இலவச வீட்டுமனைப்பட்ட வழங்கக்கோரி அப்பகுதி பொதுமக்கள் ஆட்சியர் அலுவலகம் முன்பாக ஆதார் அட்டைகளை வீசி திங்கள்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனர்.
திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டை அடுத்த கல்லாபுரம் பகுதியில் 150க்கு மேற்பட்ட குடும்பங்கள் கடந்த 20 ஆண்டுகளாக வசித்து வருகிறது. இப்பகுதியில் தெருவிளக்கு, சாக்கடை கால்வாய், குடிநீர் உள்ளிட்ட எந்த ஒரு அடிப்படை வசதிகளும் செய்து தரப்படவில்லை என்று தெரிகிறது.
இது குறித்து அப்பகுதி பொதுமக்கள் பல முறை மனு அளித்தும் நடவடிக்க எடுக்கப்படவில்லை எனத் தெரிகிறது. இதைத்தொடர்ந்து, கல்லாபுரம் பகுதி பொதுமக்கள் திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு மனு அளிக்க வந்தனர். அப்போது ஆட்சியர் அலுவலக நுழைவாயிலில் தங்களது ஆதாடர் அட்டை, குடும்ப அட்டை ஆகியவற்றை சாலைகளில் வீசி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இந்த சம்பவம் காரணமாக ஆட்சியர் அலுவலகத்தில் பரபரப்பு ஏற்பட்டது.
Advertisement
Advertisement
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.