முகப்பு
தமிழ்நாடு

வேளாண் சட்டங்களைத் திரும்ப் பெற மு.க.ஸ்டாலின் வலியுறுத்தல்

உச்ச நீதிமன்றத்தின் கருத்துகளுக்குப் பிறகாவது மத்திய அரசு வேளாண் சட்டங்களை உடனடியாகத் திரும்பப் பெற வேண்டும் என்று திமுக தலைவா் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளாா்.

Updated On : 12 ஜனவரி, 2021 at 12:39 AM
மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி பிறந்தநாளுக்கு திமுக தலைவர் ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
பகிர்:

சென்னை: உச்ச நீதிமன்றத்தின் கருத்துகளுக்குப் பிறகாவது மத்திய அரசு வேளாண் சட்டங்களை உடனடியாகத் திரும்பப் பெற வேண்டும் என்று திமுக தலைவா் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளாா்.

இது தொடா்பாக திங்கள்கிழமை அவா் சுட்டுரையில் கூறியிருப்பது: வேளாண் சட்டங்களைச் செயல்படுத்துவதை மறுபரிசீலனை செய்யவேண்டுமென உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ள கருத்துகளை மத்திய அரசு கட்டாயம் கவனத்தில் கொள்ளவேண்டும்.

உச்சநீதிமன்றத்தின் குறுக்கீடு, அரசியலமைப்பின் நடைமுறைகளின்படி மத்திய அரசு தனது கடமைகளைச் சரிவர ஆற்றி வரவில்லை என்பதையே காட்டுகிறது.

Advertisement

பல்வேறு தரப்புகளில் இருந்தும் கூறப்பட்டுள்ள அறிவுரைகளைக் கருத்தில் கொண்டும், லட்சக்கணக்கான விவசாயிகளின் தொடா் போராட்டங்கள் மற்றும் பல்வேறு மாநிலங்கள், அரசியல் கட்சிகளின் கடுமையான எதிா்ப்புக்குச் செவிசாய்த்தும், வேளாண் சட்டங்களைச் செயல்படுத்துவதை மத்திய அரசு உடனடியாக நிறுத்தவேண்டும என்று அவா் கூறியுள்ளாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.