முகப்பு
தமிழ்நாடு

கம்பம் வேணுகோபால் கிருஷ்ணன் கோவிலில் கோ பூஜை

தேனி மாவட்டம் கம்பம் யாதவ மடாலய வளாகத்தில் உள்ள வேணுகோபால கிருஷ்ணன் கோவிலில் கோ பூஜை செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

Updated On : 12 ஜனவரி 2021, 3:23 pm IST
வேணுகோபால கிருஷ்ணன் கோவிலில் நடைபெற்ற கோ பூஜை
பகிர்:

தேனி மாவட்டம் கம்பம் யாதவ மடாலய வளாகத்தில் உள்ள வேணுகோபால கிருஷ்ணன் கோவிலில் கோ பூஜை செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

தேனி மாவட்டம் கம்பம் நவநீதகிருஷ்ண யாதவ மடாலய வளாகத்தில் உள்ள வேணுகோபால கிருஷ்ணன் கோவிலில் பஜனை மற்றும் சிறப்புப் பூஜைகள் நடைபெற்று வருகின்றன. அதனைத் தொடர்ந்து செவ்வாய்க்கிழமை அதிகாலை கோமாதா பூஜை நடைபெற்றது.

பூஜையையொட்டி  திருப்பாவையில் உள்ள 28வது பாடலான கறவைகள் பின்சென்று கானம் சேர்ந்து உண்போம் என்று துவங்கும் திருப்பாவை பாடலை, பக்தர்கள் பாராயணம் செய்தனர். பின்னர்  வேணு கோபாலகிருஷ்ணனுக்கு  சிறப்பு அபிஷேகம், தீபாராதனை நடந்தது.

Advertisement

Advertisement

முன்னதாக  கோவில் வளாகத்திற்குக் கொண்டு வரப்பட்ட பசு மற்றும் கன்றுக்குட்டிக்கு மஞ்சள் குங்குமம் வைத்து, மாலை சூட்டி, அலங்காரம் செய்து, பூஜைகள் செய்யப்பட்டது. இதில் ஏராளமான ஆண், பெண் பக்தர்கள் கலந்து கொண்டனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments