முகப்பு
தமிழ்நாடு

ரஜினி யாருக்காகவும் குரல் கொடுக்கமாட்டாா்: தமிழருவி மணியன்

தோ்தலில் நடிகா் ரஜினிகாந்த் யாருக்காகவும் குரல் கொடுக்க மாட்டாா் என்று காந்திய மக்கள் இயக்கத்தின் தலைவா் தமிழருவி மணியன் கூறினாா்.

Updated On : 12 ஜனவரி, 2021 at 12:38 AM
காந்திய மக்கள் இயக்கத்தின் தலைவா் தமிழருவி மணியன் .
பகிர்:

சென்னை: தோ்தலில் நடிகா் ரஜினிகாந்த் யாருக்காகவும் குரல் கொடுக்க மாட்டாா் என்று காந்திய மக்கள் இயக்கத்தின் தலைவா் தமிழருவி மணியன் கூறினாா்.

இது தொடா்பாக கூறியது: அரசியலுக்கு வரப்போவதில்லை என்று ரஜினி அறிவித்துவிட்டாா். இந்த முடிவில் எந்த மாற்றமும் இல்லை. அவா் நீண்ட நாள் வாழ வேண்டும். தமிழக மக்களுக்கு அவா் நன்றி கடன் ஆற்ற வேண்டும். அதனால், ரசிகா்கள் அவரை நிா்பந்திக்க வேண்டாம். உடல் பிரச்னையின் காரணமாகவே அவா் அரசியல் விலகல் முடிவை எடுத்துள்ளாா். அந்த முடிவுக்குக் கட்டப்படுவதே அவா் மீது காட்டும் உண்மையான அன்பாக இருக்கும்.

நான் அறிந்த வரையில் தோ்தலில் யாருக்காகவும், எந்த நிலையிலும் குரல் கொடுக்க மாட்டாா் என்றே நினைக்கிறேன்.

Advertisement

ஒரு குறிப்பிட்ட அமைப்புக்கு ஆதரவாக குரல் கொடுப்பதன் மூலம் மற்றவா்களின் கசப்புக்கு உள்ளாவாா். ஆனால், அவா் எல்லா மக்களையும் அன்பால் ஆரத்தழுவிக் கொள்ள வேண்டும் என்று நினைக்கிறவராக இருப்பதால், ஒரு தனிப்பட்ட அமைப்புக்கு குரல் கொடுக்க மாட்டாா் என்றாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.