முகப்பு
தமிழ்நாடு

சீர்காழி சட்டைநாதர் கோவிலில் தர்மபுரம் ஆதினம் வழிபாடு

சீர்காழி சட்டைநாதர் கோவிலில் தர்மபுரம் ஆதினம் வழிபாடு செய்தார். 

Updated On : 12 ஜனவரி 2021, 5:49 pm IST
பகிர்:

சீர்காழி சட்டைநாதர் கோவிலில் தர்மபுரம் ஆதினம் வழிபாடு செய்தார். 

சீர்காழியில் தருமபுரம் ஆதினத்திற்கு உட்பட்ட ஸ்ரீ சட்டைநாதர் கோயில் உள்ளது. இக்கோயில் திருநிலை நாயகி அம்மன் உடனாகிய பிரம்மபுரீஸ்வரர் சுவாமி அருள் பாலிக்கிறார். 

இங்கு மலைமீது உள்ள கோயிலில் தோணியப்பர் உமாமகேஸ்வரி சட்டநாதர் ஆலய சுவாமிகள் அருள் பாலிக்கின்றனர். திருஞானசம்பந்தருக்கு ஞானப்பால் வழங்கிய தலமாக இக்கோயில் விளங்குகிறது பிரசித்தி பெற்ற இக்கோயிலுக்கு தர்மபுரம் ஆதினம் 26ஆவது குருமகாசந்நிதானம் ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாச்சாரிய சுவாமிகள் தனுர் மாத வழிபாடு நிகழ்ச்சிக்காக இக்கோயிலுக்கு வருகை புரிந்தார். 

Advertisement

Advertisement

முன்னதாக ஆபத்து காத்த விநாயகர் கோவிலில் வழிபாடு செய்தார் தர்மபுர ஆதினம். தொடர்ந்து மூலவர் பிரம்மபுரீஸ்வரர் திருநிலை நாயகி அம்பாள் தோணியப்பர் சட்டைநாதர் திருஞானசம்பந்தர் ஆகிய சுவாமி சன்னதிக்குச் சென்று வழிபாடு செய்தார். கோயில் சிவாச்சாரியார்கள் தருமபுரம் ஆதினத்திற்கு பிரசாதங்களை வழங்கினர்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments