முகப்பு
தமிழ்நாடு

தமிழகத்தில் இந்தாண்டு 7 இடங்களில் அகழாய்வுப் பணி: தொல்லியல் துறை

தமிழகத்தில் இந்தாண்டு 7 இடங்களில் அகழாய்வு நடைபெறும் என தொல்லியல் துறை அறிவித்துள்ளது.

Updated On : 13 ஜனவரி, 2021 at 12:29 PM
தமிழகத்தில் இந்தாண்டு 7 இடங்களில் அகழாய்வுப் பணி: தொல்லியல் துறை (கோப்புப்படம்)
பகிர்:


தமிழகத்தில் இந்தாண்டு 7 இடங்களில் அகழாய்வு நடைபெறும் என தொல்லியல் துறை அறிவித்துள்ளது.

தமிழக அரசு பரிந்துரையை ஏற்று மத்திய தொல்லியல் ஆலோசனை வாரிய நிலைக்குழு இந்த ஒப்புதலை அளித்துள்ளது.

சிவகங்கையில் கீழடி, தூத்துக்குடியில் ஆதிச்சநல்லூர், சிவகளை, கொற்கையில் அகழாய்வுப் பணிகள் நடைபெற உள்ளது.

Advertisement

ஈரோட்டில் கொடுமணல், கிருஷ்ணகிரியில் மயிலாடும்பாறை, அரியலூரில் கங்கைகொண்ட சோழபுரம், மாளிகை மேடு ஆகிய பகுதிகளில் அகழாய்வு நடைபெறும் என கூறப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.