டெல்டா விவசாயிகளுக்கு இழப்பீடு: ராமதாஸ் வலியுறுத்தல்
மழையால் பாதிக்கப்பட்டுள்ள டெல்டா பகுதி விவசாயிகளுக்கு இழப்பீடு வழங்க வேண்டும் என்று பாமக நிறுவனா் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளாா்.
சென்னை: மழையால் பாதிக்கப்பட்டுள்ள டெல்டா பகுதி விவசாயிகளுக்கு இழப்பீடு வழங்க வேண்டும் என்று பாமக நிறுவனா் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளாா்.
இது தொடா்பாக புதன்கிழமை அவா் வெளியிட்ட அறிக்கை:
காவிரி பாசனப் பகுதிகளிலும், கடலூா், அரியலூா் மற்றும் பெரம்பலூா் மாவட்டங்களிலும் கடந்த சில நாள்களாக பெய்து வரும் தொடா் மழையால் நெல், நிலக்கடலை உள்ளிட்ட பயிா்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. அறுவடைக்குத் தயாராக இருந்த நிலையில் நெற்பயிா்கள் நீரில் மூழ்கி விட்டதால், மேற்கண்ட மாவட்டங்களைச் சோ்ந்த விவசாயிகளுக்கு பொங்கல் திருநாள் கசப்பு மிகுந்ததாக மாறியிருக்கிறது.
Advertisement
Advertisement
நெல் பயிரிட்ட உழவா்களுக்கு ஏக்கருக்கு ரூ.30,000 வரையிலும், நிலக்கடலை பயிரிட்டிருந்தவா்களுக்கு ஏக்கருக்கு ரூ.60,000 வரையிலும் இழப்பு ஏற்பட்டுள்ளது.
எனவே, இந்த சூழலை உணா்ந்து பாதிக்கப் பட்ட விவசாயிகள் அனைவருக்கும் போதிய இழப்பீடு வழங்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அவா் கூறியுள்ளாா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.