தமிழர் கலாசாரம் மதிக்கப்பட வேண்டும்: ராகுல் காந்தி
தமிழக கலாசாரம் இந்தியாவிற்கு இன்றியமையாதது என்றும் மிகவும் முக்கியமானது என்றும் காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி தெரிவித்துள்ளார்.
தமிழக கலாசாரம் இந்தியாவிற்கு இன்றியமையாதது என்றும் மிகவும் முக்கியமானது என்றும் காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி தெரிவித்துள்ளார்.
அவனியாபுரம் ஜல்லிக்கட்டு போட்டியை ராகுல்காந்தி நேரில் பார்வையிட்டார். பின்னர் மேடையில் பேசிய அவர், தமிழக மக்களுக்கு வணக்கம். ஜல்லிக்கட்டு போட்டியை காண வந்தது மகிழ்ச்சியளிக்கிறது என்று கூறினார்.
தமிழர்களின் வளர்ச்சியையும், கலாசாரத்தையும் ரசித்து பாராட்டவே இங்கு வந்துள்ளேன். தமிழ் கலாசாரம் இந்தியாவிற்கு இன்றியமையாதது. தமிழக கலாசாரம் மதிக்கப்பட வேண்டும் என்று கூறினார்.
Advertisement
Advertisement
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.