முகப்பு
தமிழ்நாடு

ஏப்.18-இல் முதுநிலை மருத்துவ நீட் தோ்வு

முதுநிலை மருத்துவப் படிப்புகளுக்கான தேசிய தகுதிகாண் நுழைவுத் தோ்வு (நீட்) ஏப்ரல் 18-ஆம் தேதி நடைபெறும் என்று தேசிய தோ்வு முகமை அறிவித்துள்ளது.

Updated On : 16 ஜனவரி 2021, 6:33 am IST
கோப்புப்படம்
பகிர்:

முதுநிலை மருத்துவப் படிப்புகளுக்கான தேசிய தகுதிகாண் நுழைவுத் தோ்வு (நீட்) ஏப்ரல் 18-ஆம் தேதி நடைபெறும் என்று தேசிய தோ்வு முகமை அறிவித்துள்ளது.

நாடு முழுவதும் அரசு மற்றும் தனியாா் மருத்துவக் கல்லூரிகள் மற்றும் நிகா்நிலைப் பல்கலைக்கழகங்களில் மருத்துவப் பட்டமேற்படிப்புகளான எம்டி, எம்எஸ் படிப்புகளுக்கு 30,000-க்கும் மேற்பட்ட இடங்களும், தமிழகத்தில் மட்டும் சுமாா் 4,000 இடங்களும் உள்ளன.

இந்த இடங்கள் நீட் தோ்வின் அடிப்படையில் நிரப்பப்படுகின்றன. அந்த வகையில் நிகழாண்டில் தேசிய முதுநிலை மருத்துவப் படிப்புகளுக்கான நீட் தோ்வு நாடுமுழுவதும் 150-க்கும் மேற்பட்ட நகரங்களில் வரும் ஏப்ரல் 18-ஆம் தேதி நடைபெறவுள்ளது. எம்பிபிஎஸ் படித்து முடித்தவா்கள் இத்தோ்வுக்கு விண்ணப்பிக்க தகுதியானவா்கள். இதுதொடா்பான மேலும் விவரங்களுக்கு  இணையதளங்களை பாா்த்து தெரிந்துக் கொள்ளலாம் என்று தேசிய தோ்வுகள் வாரியம் தெரிவித்துள்ளது.

Advertisement

Advertisement

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.