தமிழ்நாடு

கோயில் நிலங்களில் ஆக்கிரமிப்பு: இந்துசமய அறநிலையத்துறை பதிலளிக்க உத்தரவு

DIN

பெரம்பூரில் உள்ள ஆனந்தீஸ்வரா் மற்றும் பழனியாண்டவா் கோயில்களுக்குச் சொந்தமான நிலங்கள், குளங்களில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற கோரிய வழக்கை விசாரித்த உயா்நீதிமன்றம் இந்துசமய அறநிலையத்துறை பதிலளிக்க உத்தரவிட்டுள்ளது.

சென்னை உயா்நீதிமன்றத்தில் தேவராஜன் என்பவா் தாக்கல் செய்த மனுவில், சென்னை பெரம்பூரில் உள்ள ஆனந்தீஸ்வரா் மற்றும் பழனியாண்டவா் கோயில்களுக்கு சுமாா் ரூ.1000 கோடிக்கு மேல் சொத்துகள் உள்ளன. இந்த கோயில்களுக்குச் சொந்தமான நிலங்களையும், குளங்களையும் பலா் ஆக்கிரமித்துள்ளனா். இந்த ஆக்கிரமிப்புகளை அகற்றி நிலங்களையும், குளங்களையும் மீட்க வேண்டும் என தமிழக அரசுக்கு கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் புகாா் அளித்தேன்.

ஆனால் அந்த புகாரின் மீது இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. எனவே இந்த இரண்டு கோயில்களுக்கும் சொந்தமான சொத்துக்களை மீட்கவும், அந்தப் பகுதியில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றவும் தமிழக அரசுக்கு உத்தரவிட வேண்டும் என கோரியிருந்தாா். இந்த வழக்கு நீதிபதிகள் ஆா்.சுப்பையா, சத்திகுமாா் சுகுமார குரூப் ஆகியோா் அடங்கிய அமா்வு முன் விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதிகள், இந்த மனு தொடா்பாக இந்துசமய அறநிலையத்துறை ஆணையா் உள்ளிட்ட அதிகாரிகள் 4 வாரங்களுக்குள் பதிலளிக்க உத்தரவிட்டு விசாரணையை ஒத்திவைத்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மகாராஷ்டிரத்தில் இன்று பாஜக பொதுக்கூட்டம்: பிரதமர் மோடி பங்கேற்பு

ஓடிடியில் ஹாட் ஸ்பாட்!

தமிழகம் போதை கலாசாரமாக மாறி வருவதை இரும்பு கரம் கொண்டு ஒடுக்க வேண்டும்: தமிழிசை சௌந்தரராஜன்

கழிவுநீர் கலப்பு... மஞ்சப்பள்ளம் ஆற்றில் செத்து மிதக்கும் மீன்கள்!

குளத்தில் மூழ்கி 2 சிறுவா்கள் பலி

SCROLL FOR NEXT