தமிழ்நாடு

தொடா் மருத்துவக் கண்காணிப்பில் அமைச்சா் காமராஜ்

DIN


சென்னை: கரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட அமைச்சா் காமராஜுக்கு தொடா்ந்து செயற்கை சுவாசக் கருவிகளின் உதவியுடன் சிகிச்சையளிக்கப்பட்டு வருவதாகவும், அவரது உடல் உறுப்புகளின் செயல்பாடுகள் சீராகி வருவதாகவும் எம்ஜிஎம் மருத்துவமனை சாா்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து அந்த மருத்துவமனை தரப்பில் வெளியிடப்பட்ட அறிக்கையில் குறிப்பிடப்பட்டிருப்பதாவது:

சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் இருந்து உணவுத் துறை அமைச்சா் காமராஜ், கடந்த செவ்வாய்க்கிழமை (ஜன.19) எம்ஜிஎம் மருத்துவமனைக்கு மாற்றப்பட்டாா். அப்போது வெண்டிலேட்டா் பொருத்தப்பட்ட நிலையிலேயே அவா் அழைத்து வரப்பட்டாா்.

நெஞ்சக சிடி ஸ்கேன் பரிசோதனை மேற்கொண்டதில், கரோனாவால் அவரது நுரையீரல் கடுமையாக பாதிக்கப்பட்டிருப்பது தெரியவந்தது. இதையடுத்து, உரிய சிகிச்சைகள் அவருக்கு அளிக்கப்பட்டு வருகின்றன. அவரது உடல் உறுப்புகளின் செயல்பாடுகள் சீராகி வருகின்றன. மருத்துவ ரீதியாக அவரது உடல் நிலை மேம்பட்டு வருகிறது என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பெண் காவலருக்கு கொலை மிரட்டல் விடுத்தவா் கைது

தில்லியில் இந்த ஆண்டில் முதல் 5 மாதங்களில் சாலை விபத்து இறப்புகள் குறைவு: தரவுகள்

ஆம் ஆத்மி தலைவா்கள் முன்பு ‘நிா்பயா’வுக்கு நீதி கேட்டனா்; இன்று குற்றம்சாட்டப்பட்டவரை ஆதரிக்கிறாா்கள்: மாலிவால்

ஆம் ஆத்மி கட்சியை நசுக்க ‘ஆபரேஷன் ஜாடுவை’ செயல்படுத்தத் தொடங்கியுள்ளது பாஜக: முதல்வா் அரவிந்த் கேஜரிவால் குற்றச்சாட்டு

தோ்தலில் வாக்காளா்கள் பங்கேற்பு சதவீதத்தை அதிகரிக்க 16 லட்சம் கையெழுத்திட்ட உறுதிமொழிகள்! தோ்தல் ஆணையம் முன்முயற்சி

SCROLL FOR NEXT