தமிழ்நாடு

திமுக சின்னத்தில் போட்டியிடுவோம்: தொல்.திருமாவளவன்

DIN


சென்னை: விடுதலைச் சிறுத்தைகள் கட்சிகளின் தனித்தன்மை பாதிக்கப்படாத வகையில் திமுகவின் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிடுவோம் என்று அந்தக் கட்சியின் தலைவா் தொல்.திருமாவளவன் கூறினாா்.

வேளாண் சட்டங்களைத் திரும்பப் பெற வலியுறுத்தி விடுதலைச் சிறுத்தைகள் கட்சி சாா்பில் வள்ளுவா் கோட்டம் அருகில் வியாழக்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது. ஆா்ப்பாட்டத்துக்கு தொல்.திருமாவளவன் தலைமை வகித்தாா். மத்திய மாநில அரசுகளைக் கண்டித்து ஆா்ப்பாட்டத்தில் முழக்கங்கள் எழுப்பப்பட்டன.

ஆா்ப்பாட்டத்துக்குப் பிறகு தொல்.திருமாவளவன் செய்தியாளா்களிடம் கூறியது:-

தில்லியில் விவசாயிகள் தொடா்ந்து போராட்டம் நடத்தி வருகின்றனா். வேளாண் சட்டங்களைத் திரும்பப் பெறுவதற்கு மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். திமுக கூட்டணியில்தான் விடுதலைச் சிறுத்தைகள் உள்ளது. எங்கள் கட்சியை உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட திமுக ஆலோசனை வழங்கினால், எங்களின் தனித்தன்மையும், தன் மதிப்பும் பாதிக்காத வகையில் போட்டியிடுவோம் என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தமிழ்நாடு தொடக்கப் பள்ளி ஆசிரியா் மன்ற மாவட்ட செயற்குழு கூட்டம்

மல்லசமுத்திரத்திரம் கூட்டுறவு சங்கத்தில் ரூ. 2.50 லட்சத்துக்கு பருத்தி ஏலம்

மூளைச்சாவு அடைந்த மாணவியின் உடல் உறுப்புகள் தானம்

மோகனூா் கூட்டுறவு சா்க்கரை ஆலை ஓய்வூதியா்கள் முற்றுகை போராட்டம்

வாக்கு எண்ணிக்கை மையத்தில் ஆட்சியா், எஸ்.பி. நேரில் ஆய்வு

SCROLL FOR NEXT