நாகை மாவட்டம், வேதாரண்யம் சட்டப் பேரவை தொகுதியில் போட்டியிட நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர் மாட்டு வண்டியில் சென்று இன்று (மார்க் .16) மனுத் தாக்கல் செய்தார்.
இந்த தொகுதியின் நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர் கு.இராசேந்திரன், வேதாரண்யம் வடக்கு வீதியிலிருந்து கரும்புகள் கட்டிய மாட்டு வண்டியில் வட்டாட்சியர் அலுவலக வளாகத்துக்கு சென்றார்.
தொண்டர்கள் கரும்புகளை ஏந்தி பின்சென்றனர். விவசாயி சின்னத்தை நினைவூட்டும் வகையில் தலையில் முண்டாசு கட்டி வண்டியில் நின்று சென்றார். பேண்ட், சட்டை, காலணி அணிந்த விவசாயியாக காணப்பட்டார். வேதாரண்யம் வட்டாட்சியர் அலுவலகத்தில் தேர்தல் நடத்தும் அலுவலர் துரைமுருகனிடம் மனுத் தாக்கல் செய்தார்.