தமிழ்நாடு

ஐசிஏஆர் தேர்வு: அகில இந்திய அளவில் திண்டுக்கல் மாணவி 2-ஆவது இடம்

DIN


திண்டுக்கல்: இந்திய வேளாண் ஆராய்ச்சிக் கழகம் நடத்தும் முதுகலை பாடப் பிரிவுகளுக்கான நுழைவுத் தேர்வில் கால்நடைத் துறையில் திண்டுக்கல் மாணவி, அகில இந்திய அளவில் 2-ஆவது இடத்தைப் பிடித்துள்ளார்.

வேளாண்மை, தோட்டக்கலை, கால்நடை, மீன்வளம் உள்ளிட்டப் பல்வேறு துறைகளில், மத்திய பல்கலை. மற்றும் ஆராய்ச்சி நிலையங்களில் முதுகலைப் பாடப்  பிரிவில்  பயில்வதற்கான அகில இந்திய நுழைவுத் தேர்வு இந்திய வேளாண் ஆராய்ச்சிக் கழகம் சார்பில் ஆண்டு தோறும் நடத்தப்படுகிறது. அதன்படி 2021-22-ஆம் ஆண்டுக்கான நுழைவுத் தேர்வு, கடந்த செப். 17-ஆம் தேதி நடத்தப்பட்டது. அதற்கான முடிவுகள் செவ்வாய்க்கிழமை (நவ. 16) இரவு வெளியிடப்பட்டது. இதில், திண்டுக்கல் அடுத்துள்ள பாலகிருஷ்ணபுரம் பகுதியைச் சேர்ந்த அரிநாயகம், சுமதி தம்பதியரின் மகள் அ. ஓவியா (24)கால்நடைத் துறையில் அகில இந்திய அளவில் 2-ஆவது இடம் பெற்று சாதனை படைத்துள்ளார்.  மொத்தம் 480 மதிப்பெண்களுக்கு நடத்தப்பட்ட இத்தேர்வில், மாணவி ஓவியா 329 மதிப்பெண்கள் பெற்றுள்ளார். இவர், திருநெல்வேலி கால்நடை மருத்துவக் கல்லூரியில், பிவிஎஸ்சி மற்றும் ஏஹெச். பட்டம் பெற்றுள்ளார். 

இதுதொடர்பாக மாணவி ஓவியா கூறுகையில், அகில இந்திய நுழைவுத் தேர்வுக்காக 3 மாதங்களாக சிறப்பு கவனம் செலுத்தி தயார் செய்தேன். பேராசிரியர்கள் மட்டுமின்றி மூத்த மாணவர்களும் எனக்கு வழிகாட்டியாக இருந்தனர். அதோடு எனது பெற்றோரின் ஒத்துழைப்பும், நான் அதிக  மதிப்பெண்கள் பெறுவதற்கு உதவி புரிந்தன என்றார்.

புதுச்சேரி ஆளுநர் வாழ்த்து: மாணவி ஓவியபள்ளிக் குழந்தைகளின் பாதுகாப்பு குறித்து வழிகாட்டி நெறிமுறைகள் நாளை வெளியீடுôவுக்கு, புதுச்சேரி ஆளுநர் தமிழிசை  சௌந்தரராஜன், கால்நடைத்துறை பல்கலைக்கழக பேராசிரியர்கள் உள்ளிட்ட பலர் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அனுபமா பரமேஸ்வரனின் புதிய பட அறிவிப்பு!

தமிழ்நாட்டில் 104 நீதிபதிகள் இடமாற்றம்!

பகலறியான் படத்தின் டீசர்

கௌதம் கம்பீர் ஸ்டைலில் விளையாடுகிறோம்: ஹர்ஷித் ராணா

ஆஸ்திரேலியாவில் இந்திய மாணவருக்கு நேர்ந்த சோகம்!

SCROLL FOR NEXT