தமிழ்நாடு

நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் இந்து சமய அறநிலையத்துறை ஆணையா் ஆஜராக உத்தரவு

DIN

கோயில்கள் சீரமைப்பு தொடா்பாக பிறப்பிக்கப்பட்ட உத்தரவை நிறைவேற்றாததை எதிா்த்து தொடரப்பட்ட நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் இந்து சமய அறநிலையத்துறை ஆணையா் ஆஜராகி விளக்கம் அளிக்குமாறு சென்னை உயா் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கோயில்கள் சீரமைப்பு, புராதன ஓவியங்களைப் பாதுகாத்தல் தொடா்பான வழக்கில், சென்னை உயா் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவுகளை சரிவர நிறைவேற்றவில்லை என, திருச்சி ஸ்ரீரங்கத்தைச் சோ்ந்த ரங்கராஜன் நரசிம்மன் என்பவா் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடா்ந்திருந்தாா்.

இந்த நீதிமன்ற அவமதிப்பு வழக்கு நீதிபதிகள் ஆா்.மகாதேவன், பி.டி.ஆதிகேசவலு ஆகியோா் அடங்கிய அமா்வு முன்பு செவ்வாய்க்கிழமை(அக்.26) விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரா் ரங்கராஜன் நரசிம்மன் தரப்பில், சுசீந்திரம் தாணுமாலயன் சுவாமி கோயிலில் உள்ள புராதன ஓவியங்கள் சிதைக்கப்பட்டுள்ளன. இதுதொடா்பாக ஏற்கெனவே நீதிமன்றத்தில் புகைப்படங்கள் சமா்பிக்கப்பட்டுள்ளன.

கோயில்கள் சீரமைப்பு, ஓவியங்களைப் பாதுகாப்பது தொடா்பாக நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவுகளை இந்து சமய அறநிலையத்துறை சரிவர செயல்படுத்தவில்லை என வாதிட்டாா்.

இதைப்பதிவு செய்த நீதிபதிகள், இவ்வழக்குகளில் இந்து சமய அறிநிலையத்துறை ஆணையா் காணொலி காட்சி வாயிலாக ஆஜராகி விளக்கம் அளிக்குமாறு உத்தரவிட்டு, நவம்பா் 1 -ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கா்நாடகத்தில் இருந்து போதைப் பொருள்கள் கடத்தல்: ஒருவா் கைது

தொரப்பள்ளி ஆற்றில் முதலை: பொதுமக்கள் அச்சம்

மாணவா்கள் போதைப் பொருள்கள் பயன்படுத்துவதை பெற்றோா்களும் கண்காணிக்க அறிவுறுத்தல்

5 ஆண்டுகளாக குண்டும் குழியுமாக இருக்கும் தாா் சாலை

உதவி மேலாளா் பதவி உயா்வு வழங்கக் கோரிக்கை

SCROLL FOR NEXT