ஜன. 16ல் கரோனா தடுப்பூசி: மதுரையில் முதல்வர் பழனிசாமி தொடங்கி வைக்கிறார்
தமிழகத்தில் கரோனா தடுப்பூசி திட்டத்தை மதுரையில் வருகிற ஜனவரி 16 ஆம் தேதி முதல்வர் பழனிசாமி தொடங்கி வைக்கிறார்.
தமிழ்நாடுஜன. 16ல் கரோனா தடுப்பூசி: மதுரையில் முதல்வர் பழனிசாமி தொடங்கி வைக்கிறார்
தமிழகத்தில் கரோனா தடுப்பூசி திட்டத்தை மதுரையில் வருகிற ஜனவரி 16 ஆம் தேதி முதல்வர் பழனிசாமி தொடங்கி வைக்கிறார்.
தமிழகத்தில் கரோனா தடுப்பூசி திட்டத்தை மதுரையில் வருகிற ஜனவரி 16 ஆம் தேதி முதல்வர் பழனிசாமி தொடங்கி வைக்கிறார்.
கரோனா நோய்த்தொற்றுக்கான தடுப்பூசி திட்டம் வருகிற ஜனவரி 16 முதல் தொடங்கப்படவுள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. கரோனாவுக்கு எதிரான போராட்டத்தில் முன்னணி கள வீரா்களாகச் செயல்படும் 3 கோடி சுகாதாரப் பணியாளா்களுக்குத் தடுப்பூசி முதலில் செலுத்தப்படவுள்ளதாகவும், அதையடுத்து 50 வயதைக் கடந்தோா், இணைநோய் உள்ள 50 வயதுக்குக் குறைவான நபா்கள் என மொத்தமாக 27 கோடி பேருக்கு தடுப்பூசி செலுத்துவதில் அடுத்தகட்ட முன்னுரிமை வழங்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் தமிழகத்தில் வருகிற ஜனவரி 16 ஆம் தேதி கரோனா தடுப்பூசி போடும் நிகழ்வை முதல்வர் எடப்பாடி கே. பழனிசாமி தொடங்கி வைக்கிறார். மதுரையில் நடைபெறும் நிகழ்ச்சி ஒன்றில் அவர் தொடங்கி வைக்க இருக்கிறார்.