தமிழ்மண் பதிப்பக உரிமையாளர் கோ. இளவழகன் காலமானார்
தமிழ்மண் பதிப்பக உரிமையாளர் கோ. இளவழகன் சென்னையில் இன்று காலமானார்.
தமிழ்மண் பதிப்பக உரிமையாளர் கோ. இளவழகன் சென்னையில் இன்று காலமானார்.
கரோனா தொற்று பாதித்து சிகிச்சை பெற்று வந்த கோ.இளவழகன் சிகிச்சை பலனின்றி சென்னையில் இன்று காலை 6.10 மணியளவில் உயிரிழந்தார்.
பாவேந்தம், தேவநேயம், அப்பாத்துரையம், அண்ணாவின் படைப்புகள் என அனைத்தையும் நூலாக்கி தந்தப் பதிப்பாளர் தமிழ்மண் பதிப்பகத்தின் உரிமையாளர் இளவழகன்.
Advertisement
Advertisement
தமிழ்மண் பதிப்பகத்தின் உரிமையாளரும் பேரறிஞர் அண்ணாவின் படைப்புகளை முழுமையாக வெளிக்கொண்டு வந்தவருமான இளவழகன் மறைவு செய்தி அறிந்து பலரும் தங்களது இரங்கலை தெரிவித்து வருகிறார்கள்.