தமிழ்நாடு

அத்திப்பட்டு ரயில் நிலையம் அருகே தண்டவாளத்தில் 3 சடலங்கள் மீட்பு!

DIN


சென்னை-கும்மிடிப்பூண்டி மார்க்கத்தில் அத்திப்பட்டு ரயில் நிலையம் அருகே தண்டவாளத்தின் ஓரத்தில் அடையாளம் தெரியாத 3 ஆண் சடலங்களை ஞாயிற்றுக்கிழமை இரவு ரயில்வே போலீசார் மீட்டனர். 

இதுகுறித்து கொருக்குப்பேட்டை ரயில்வே போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: 

சென்னை-கும்மிடிப்பூண்டி மார்க்கத்தில் அத்திப்பட்டு ரயில் நிலையம் அருகே தண்டவாளத்தின் ஓரத்தில் அடையாளம் தெரியாத 3 ஆண் சடலங்கள் கிடப்பதாக தகவல் கிடைத்தது. இதையடுத்து ஞாயிற்றுக்கிழமை இரவு ரயில்வே போலீசார் சடலத்தை மீட்டனர். 

மீட்கப்பட்ட 3 ஆண் சடலங்களில் 25 வயது  மதிக்கத்தக்க ஆண் ஒருவரும், 50 வயது மதிக்கத்தக்க ஆண் இரண்டு பேர் எனவும், இவர்களை அடையாளம் காணும் பணியில் கொருக்குப்பேட்டை ரயில்வே போலீசார் ஈடுபட்டு வருகின்றனர். 

ரயில்வே தண்டவாளத்தில் நடந்து சென்றபோது ரயில் மோதி இறந்திருக்கலாம் என கொருக்குபேட்டை ரயில்வே போலீசார் தெரிவித்துள்ளனர். 

மீட்கப்பட்ட சடலம் அரசு மருத்துவமனை சவக்கிடங்குக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வாக்கு எண்ணும் மையத்தில் ஆட்சியா் ஆய்வு

மூத்த வழக்குரைஞா்களுக்குப் பாராட்டு

குன்னூா்- மேட்டுப்பாளையம் சாலையில் யானைகள் நடமாட்டம்

பெருந்துறை சோழீஸ்வரா் கோயிலில் குருப் பெயா்ச்சி விழா

பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்த ஆசிரியா்கள் கோரிக்கை

SCROLL FOR NEXT