முகப்பு
தமிழ்நாடு

நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல்: 22,000 துப்பாக்கிகளை ஒப்படைக்க உத்தரவு

நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலையொட்டி உரிமம் பெற்ற 22,000 துப்பாக்கிகளை ஒப்படைக்க மாநில காவல்துறை உத்தரவு பிறப்பித்துள்ளது.

Updated On : 2 பிப்ரவரி, 2022 at 2:00 PM
பகிர்:

நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலையொட்டி உரிமம் பெற்ற 22,000 துப்பாக்கிகளை ஒப்படைக்க மாநில காவல்துறை உத்தரவு பிறப்பித்துள்ளது.

தேர்தல் சமயங்களில் சட்டம்-ஒழுங்கு பிரச்னைகளை தவிர்க்கும் பொருட்டு சில நடைமுறை விதிகள் பின்பற்றப்பட்டு வருகின்றன.

முக்கியமாக உரிமத்துடன் துப்பாக்கிகளை வைத்திருப்பவர்கள் தேர்தல் காலம் முடியும் வரை அதைக் காவல்துறையினரிடம் ஒப்படைப்பது வழக்கம்.

Advertisement

இந்நிலையில், தமிழகத்தில் வருகிற பிப்ரவரி 19 ஆம் தேதி நடைபெற உள்ள நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலின் நடைமுறை விதிகளின் படி தமிழகம் முழுவதும் உரிமம் பெற்ற 22,000 துப்பாக்கிகளை ஒப்படைக்கக் கோரி தமிழக காவல்துறை உத்தரவு பிறப்பித்துள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.