நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல்: 22,000 துப்பாக்கிகளை ஒப்படைக்க உத்தரவு
நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலையொட்டி உரிமம் பெற்ற 22,000 துப்பாக்கிகளை ஒப்படைக்க மாநில காவல்துறை உத்தரவு பிறப்பித்துள்ளது.
நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலையொட்டி உரிமம் பெற்ற 22,000 துப்பாக்கிகளை ஒப்படைக்க மாநில காவல்துறை உத்தரவு பிறப்பித்துள்ளது.
தேர்தல் சமயங்களில் சட்டம்-ஒழுங்கு பிரச்னைகளை தவிர்க்கும் பொருட்டு சில நடைமுறை விதிகள் பின்பற்றப்பட்டு வருகின்றன.
முக்கியமாக உரிமத்துடன் துப்பாக்கிகளை வைத்திருப்பவர்கள் தேர்தல் காலம் முடியும் வரை அதைக் காவல்துறையினரிடம் ஒப்படைப்பது வழக்கம்.
Advertisement
Advertisement
இந்நிலையில், தமிழகத்தில் வருகிற பிப்ரவரி 19 ஆம் தேதி நடைபெற உள்ள நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலின் நடைமுறை விதிகளின் படி தமிழகம் முழுவதும் உரிமம் பெற்ற 22,000 துப்பாக்கிகளை ஒப்படைக்கக் கோரி தமிழக காவல்துறை உத்தரவு பிறப்பித்துள்ளது.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.