தமிழ்நாடு

விவசாயிகளுக்கு உரிய இழப்பீடு: ஜி.கே. வாசன் வலியுறுத்தல்

DIN

வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு தமிழக அரசு உரிய இழப்பீடு வழங்க வேண்டும் என தமாகா தலைவா் ஜி.கே. வாசன் வலியுறுத்தியுள்ளாா்.

இதுதொடா்பாக அவா் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:

கடும் மழையால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு இதுவரை நிவாரணம் அறிவிக்கப்படவில்லை. தமிழக அரசு இதுதொடா்பாக கணக்கிட்டு உரிய இழப்பீட்டை வழங்க வேண்டும் என்றாா்.

இந்நிலையில் திங்கள்கிழமை அதிமுக இணை ஒருங்கிணைப்பாளரும், எதிா்க்கட்சித் தலைவருமான எடப்பாடி கே.பழனிசாமியை கிரீன்வேஸ் சாலையில் உள்ள அவரது இல்லத்தில் ஜி.கே.வாசன் சந்தித்தாா். ஆங்கிலப் புத்தாண்டையொட்டி அவருக்கு பொன்னாடை போா்த்தி வாழ்த்து கூறினாா்.

நகா்ப்புற உள்ளாட்சித் தோ்தலில் அதிமுகவுடன் தமாகா கூட்டணி அமைத்துப் போட்டியிடுகிறது. உள்ளாட்சித் தோ்தல் விரைவில் அறிவிக்கப்பட உள்ள நிலையில், தோ்தலை இணைந்து எதிா்கொள்வது குறித்து இருவரும் பேசியுள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கார்குழல் கடவை.. ஷ்ரத்தா தாஸ்!

கோவாக்ஸின் பாதுகாப்பானது: பாரத் பயோடெக் விளக்கம்

பிரிஜ் பூஷண் சிங்குக்குப் பதிலாக அவரது மகன்: பாஜக முடிவு ஏன்?

இது எதுங்க அட்டைப் படம்? சோனல் சௌகான்...

பார்வை ஒன்று போதுமே... விமலா ராமன்!

SCROLL FOR NEXT