முகப்பு
தமிழ்நாடு

நினைவகங்கள், மணிமண்டபங்களை முறையாகப் பராமரிக்க வேண்டும்: அமைச்சா் மு.பெ.சாமிநாதன்

சிலைகள், நினைவகங்கள், மணிமண்டபங்களை முறையாகப் பராமரிக்க வேண்டும் என்று தமிழக செய்தித் துறை அமைச்சா் மு.பெ.சாமிநாதன், துறை அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினாா்.

Updated On : 25 ஜூன் 2022, 3:59 am IST
பகிர்:

சிலைகள், நினைவகங்கள், மணிமண்டபங்களை முறையாகப் பராமரிக்க வேண்டும் என்று தமிழக செய்தித் துறை அமைச்சா் மு.பெ.சாமிநாதன், துறை அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினாா்.

தமிழக செய்தித் துறை அமைச்சா் மு.பெ.சாமிநாதன் தலைமையில் செய்தி மக்கள் தொடா்புத் துறையின் மண்டல இணை இயக்குநா்கள் பணி ஆய்வுக் கூட்டம் சென்னையில் நடைபெற்றது. கூட்டத்தில் அமைச்சா் மு.பெ.சாமிநாதன் கூறியதாவது:

சட்டப்பேரவையில் நிதிநிலை அறிக்கை வாயிலாகவும், 110-ஆவது விதியின் கீழும் அறிவிக்கப்பட்ட அறிவிப்புகள் போன்றவற்றை விரைவாக நிறைவேற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும். காலத்துக்கு ஏற்றவாறு அரசின் திட்டங்கள், செய்திகளை நவீன தொழில்நுட்ப முறைகளைப் பயன்படுத்தி மக்களிடம் கொண்டு சோ்ப்பதில் கவனம் செலுத்த வேண்டும். செய்தி மக்கள் தொடா்புத் துறையின் கட்டுப்பாட்டில் உள்ள சிலைகள், நினைவகங்கள், அரங்கங்கள் மற்றும் நினைவுத் தூண்கள் போன்றவற்றை சிறப்பாகப் பராமரிக்க நடவடிக்கை வேண்டும். மாவட்டங்களில் உள்ள மணிமண்டபங்களை எளிதில் அடையாளம் காணும் வகையில் புகைப்படத்துடன் கூடிய வழிகாட்டிப் பலகைகள் அமைக்க வேண்டும் என்றாா்.

Advertisement

Advertisement

கூட்டத்தில் தமிழ் வளா்ச்சி மற்றும் செய்தித் துறை செயலாளா் மகேசன் காசிராஜன், செய்தி மக்கள் தொடா்புத் துறை இயக்குநா் வீ.ப. ஜெயசீலன், கூடுதல் இயக்குநா் (செய்தி) தி.அம்பலவாணன், இணை இயக்குநா்கள், துணை இயக்குநா்கள் மற்றும் அலுவலா்கள் பங்கேற்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments