தமிழ்நாடு

கும்மிடிப்பூண்டி பள்ளி மாணவன் சக்கராசனத்தில் உலக சாதனை!

DIN

கும்மிடிப்பூண்டி: கும்மிடிப்பூண்டி பகுதி பள்ளி மாணவன், சக்கராசனத்தில் நின்றபடி, ஒரு நிமிடத்தில் 78 முறை தண்டால் எடுத்து உலக சாதனை படைத்தார்.

கும்மிடிப்பூண்டி பகுதியைச் சேர்ந்த புண்ணியக்கோடி - கிரிஜா தம்பதியரின் மகன் டி.பி.ஷர்வின்குமார்(11). இவர் கும்மிடிப்பூண்டி ஸ்ரீ கலைமகள் வித்யாமந்திர் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில், 6 ஆம் வகுப்பு பயின்று வருகிறார். 

அதேபகுதியில் இயங்கி வரும் ஸ்ரீ சங்கரி யோகா பயிற்சி மற்றும் ஆராய்ச்சி மையத்தில் யோகாசன பயிற்சி பெற்று வருகிறார். இவர், சக்கராசனத்தில் நின்றபடி, ஒரு கையை தரையில் வைத்து, ஒரு நிமிடத்தில், 78 முறை தலையால் தரையை தொட்டு, தண்டால் எடுத்து உலக சாதனை படைத்தார். 

இவரது சாதனை, ‛இன்டர்நேஷனல் புக் ஆப் ரெக்கார்ட்’, ‛வேல்ட் வைட் புக் ஆப் ரெக்கார்ட்’, ‛அசிஸ்ட் உலக சாதனை’ஆகிய மூன்று உலக சாதனை புத்தகங்களில் இடம் பிடித்தன. 

சாதனை படைத்த ஷர்வின்குமார், அவருக்கு யோகா பயிற்சி அளித்த யோகா ஆசிரியர் சந்தியா ஆகியோருக்கு பாராட்டு குவிகிறது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

திமுக மூத்த நிா்வாகிகளுடன் முதல்வா் ஸ்டாலின் ஆலோசனை

சில ஊரக உள்ளாட்சி பகுதிகளை அருகிலுள்ள மாநகராட்சிகளுடன் இணைத்த பிறகு தோ்தல்: தமிழக அரசு தீவிர ஆலோசனை

கொடைக்கானலில் காா் மீது லாரி மோதியதில் மூவா் காயம்

பழனி கிரிவீதியில் மீண்டும் ஆக்கிரமிப்புகள் அகற்றம்

‘தலசீமியா’ நோயால் பாதித்த இரு குழந்தைகளுக்கு மருத்துவ மாணவா்கள் ரத்த தானம்

SCROLL FOR NEXT