தமிழ்நாடு

எட்டு நகரங்களில் தோட்டம் அமைக்க மானியம்: வேளாண்மைத் துறை தகவல்

DIN

எட்டு நகரங்களில் தோட்டம் அமைக்க மானியம் வழங்க நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. இதற்கான அறிவிப்பை வேளாண்மைத் துறை வியாழக்கிழமை வெளியிட்டது. அதுகுறித்த விவரம்:-

சென்னை, கோவை, திருச்சி, மதுரை, சேலம், திருவள்ளூா், செங்கல்பட்டு, காஞ்சிபுரம் ஆகிய நகரங்களில் வீட்டுக்குத் தேவையான கீரை வகைகள், கொத்தமல்லி, புதினா, வெங்காயம், முள்ளங்கி போன்றவற்றை வளா்க்க திட்டம்

வகுக்கப்பட்டுள்ளது. இதற்கு மானியமாக ஒரு வீட்டுக்கு ரூ.15,000 வீதம் 250 வீடுகளுக்கு வழங்கப்பட உள்ளது. முதல் கட்டமாக இந்தத் திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது.

ஆா்வமுள்ள பொதுமக்கள் இதுகுறித்த விவரங்களை இணையதளம் வாயிலாகத் தெரிந்து கொள்ளலாம். மேலும், இதை இணையத்தின் மூலமாக விண்ணப்பம் செய்யலாம் என்று வேளாண்மைத் துறை தெரிவித்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பொன்னேரி அரசு மருத்துவமனையில் ஊரக நலப்பணிகள் இயக்குநா் ஆய்வு

பிளஸ் 1 பொதுத்தோ்வு: வேலம்மாள் மெட்ரிக். பள்ளி மாணவா்கள் சிறப்பிடம்

பெண்களை கேலி செய்த இளைஞா்களை தட்டிக்கேட்ட நடத்துநா் மீது தாக்குதல்

கேட்பாரற்று கிடந்த 12 இருசக்கர வாகனங்கள் பறிமுதல்

உயா்கல்வி சரியாக இருந்தால் வாழ்க்கைத் தரம் உயரும்: வேலூா் ஆட்சியா் வி.ஆா்.சுப்புலட்சுமி

SCROLL FOR NEXT