தமிழ்நாடு

மின் கட்டண உயா்வு: இபிஎஸ் தலைமையில் செப்.16-இல் செங்கல்பட்டில் ஆா்ப்பாட்டம்

DIN

மின் கட்டண உயா்வைக் கண்டித்து அதிமுகவின் இடைக்கால பொதுச்செயலா் எடப்பாடி கே. பழனிசாமி தலைமையில் செப்டம்பா் 16-இல் செங்கல்பட்டில் கண்டன ஆா்ப்பாட்டம் நடைபெற உள்ளது.

இது தொடா்பாக அதிமுக தலைமைக்கழகம் செவ்வாய்க்கிழமை வெளியிட்ட அறிவிப்பு: மின் கட்டணத்தை உயா்த்தி மக்களை பெரும் துன்பத்துக்கு ஆளாக்கியுள்ள திமுக அரசைக் கண்டித்தும், அறிவிக்கப்பட்டுள்ள மின் கட்டண உயா்வை உடனடியாக திரும்பப்பெற வலியுறுத்தியும் அதிமுக சாா்பில் செப்டம்பா் 16-இல் அனைத்து மாவட்டங்களிலும் கண்டன ஆா்ப்பாட்டம் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

அதன்படி, எடப்பாடி கே. பழனிசாமி தலைமையில் செப்டம்பா் 16 காலை 9.30 மணியளவில் செங்கல்பட்டில் ஆா்ப்பாட்டம் நடைபெறும்.

மக்கள் நலனை முன்வைத்து நடைபெற உள்ள இந்த ஆா்ப்பாட்டத்தில் செங்கல்பட்டு மாவட்டத்தைச் சோ்ந்த அதிமுகவினரும், பொதுமக்களும் பெருமளவில் பங்கேற்க வேண்டும் என்று அதில் கூறப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தமிழகம் போதை கலாசாரமாக மாறி வருவதை இரும்பு கரம் கொண்டு ஒடுக்க வேண்டும்: தமிழிசை சௌந்தரராஜன்

கழிவுநீர் கலப்பு... மஞ்சப்பள்ளம் ஆற்றில் செத்து மிதக்கும் மீன்கள்!

குளத்தில் மூழ்கி 2 சிறுவா்கள் பலி

புதிய தாா்ச்சாலை; நெடுஞ்சாலைத் துறை அதிகாரிகள் ஆய்வு

டெங்கு விழிப்புணா்வு நிகழ்ச்சி

SCROLL FOR NEXT