அத்திக்கடவு திட்டம் விரைவில் நிறைவேற வேண்டி தீர்த்தக்குட யாத்திரை
அத்திக்கடவு திட்டம் விரைவில் நிறைவேற வேண்டி அவிநாசிலிங்கேஸ்வரர் கோயிலிருந்து மாட்டு வண்டியில் தீர்த்தக்குடம் எடுத்து போராட்டக்குழுவினர் வியாழக்கிழமை யாத்திரை சென்றனர்.
அவிநாசி: அத்திக்கடவு திட்டம் விரைவில் நிறைவேற வேண்டி அவிநாசிலிங்கேஸ்வரர் கோயிலிருந்து மாட்டு வண்டியில் தீர்த்தக்குடம் எடுத்து போராட்டக்குழுவினர் வியாழக்கிழமை யாத்திரை சென்றனர்.
அத்திக்கடவு-அவிநாசி திட்டம் விரைவில் நிறைவேற வேண்டி, ஆண்டுதோறும் சித்திரை முதல் நாள் மேட்டுப்பாளையம் வனபத்ரகாளிம்மன் கோயிலில் இருந்து தீர்த்தம் எடுத்து வந்து அவரவர் ஊர்களிலில் உள்ள கோயில்களில் சிறப்பு வழிபாடு செய்து வருகின்றனர்.
8 ஆண்டுகளாக நடைபெற்று இந்நிகழ்வின் மற்றொரு பகுதியாக, அத்திக்கடவு திட்டத்தில் விடுபட்ட குளம், குட்டைகளை முழுமையாக இணைத்து 2 ஆவது திட்டம் விரைவில் நிறைவேற வேண்டி, கொங்கு ஏழு சிவஸ்தலங்களில் முதன்மை பெற்ற அவிநாசிலிங்கேஸ்வரர் கோயிலில் இருந்து தீர்த்தம் எடுத்து திருமுருகன்பூண்டி திருமுருகநாதசுவாமி கோயிலுக்கு மாட்டு வண்டி, குதிரை வண்டியில் யாத்திரை சென்றனர்.
Advertisement
Advertisement
இதையும் படிக்க | ஆளுநர் ஆர்.என்.ரவியுடன் அமைச்சர்கள் திடீர் சந்திப்பு
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.