முகப்பு
தமிழ்நாடு

மேட்டூர் அணை நீர்மட்டம் 104.99 அடியாக உயர்வு

மேட்டூர் அணையின் நீர்மட்டம் இன்று புதன்கிழமை காலை 8 மணி நிலவரப்படி, 104.99 அடியாக உயர்ந்துள்ளது. 

Updated On : 20 ஏப்ரல் 2022, 9:01 am IST
மேட்டூர் அணை
பகிர்:

மேட்டூர் அணையின் நீர்மட்டம் இன்று புதன்கிழமை காலை 8 மணி நிலவரப்படி, 104.99 அடியாக உயர்ந்துள்ளது. 

காவிரியின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் மழையின் காரணமாக மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இன்று புதனிகிழமை காலை மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு வினாடிக்கு 3610 கன அடியாக அதிகரித்துள்ளது. மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு அதிகரித்து வருவதால் நேற்று காலை 104.88 அடியாக இருந்த மேட்டூர் அணையின் நீர்மட்டம்  இன்று காலை 104.99 அடியாக உயர்ந்துள்ளது.

நீர் இருப்பு 71.45 டிஎம்சியாக  உள்ளது.

Advertisement

Advertisement

நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் மழையின் காரணமாக அணைக்கு வரும் நீரின் அளவு  வினாடிக்கு  2973 அடியிலிருந்து 3610 கன அடியாக அதிகரித்து உள்ளது. அணையில் இருந்து குடிநீர் தேவைக்காக வினாடிக்கு 1,500  கன அடி வீதம் தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.