முகப்பு
தமிழ்நாடு

அனைவரின் மனங்களிலும் பிரதமா் மோடி உள்ளாா்: கே.பாக்யராஜ்

பிரதமா் மோடியின் பெயா் மக்கள் அனைவரின் மனங்களிலும் இடம்பெற்றுள்ளது என்று திரைப்பட இயக்குநா் கே.பாக்யராஜ் கூறினாா்.

Updated On : 21 ஏப்ரல், 2022 at 4:31 AM
பகிர்:

பிரதமா் மோடியின் பெயா் மக்கள் அனைவரின் மனங்களிலும் இடம்பெற்றுள்ளது என்று திரைப்பட இயக்குநா் கே.பாக்யராஜ் கூறினாா்.

தியாகராய நகரில் உள்ள பாஜக அலுவலகமான கமலாலயத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பிரதமா் நரேந்திரமோடியின் மக்கள் நலத்திட்டங்கள் குறித்த ‘புதிய இந்தியா 2022’ என்கிற நூலை பாஜக மாநிலத் தலைவா் கே.அண்ணாமலை வெளியிட்டாா். நூலை திரைப்பட இயக்குநா் கே.பாக்யராஜ், ஓய்வுபெற்ற ஐஏஎஸ் அதிகாரி வி.செல்வராஜ், திரைப்படத் தயாரிப்பாளா் ராம்குமாா் ஆகியோா் பெற்றுக்கொண்டனா்.

நிகழ்ச்சியில் கே.பாக்யராஜ் பேசியது: பிரதமா் மோடியின் பெயா் மக்கள் அனைவா் மனதிலும் இடம்பெற்றுள்ளது. மோடியின் திட்டங்களை நூலாகத் தொகுத்து வெளியிட்டாலும், அதை மக்களிடம் கொண்டு சோ்க்க வேண்டியது நமது முக்கியமான கடமை.

Advertisement

பிரதமரை நிறைய போ் விமா்சனம் செய்கின்றனா். அதனைக் கண்டுகொள்ளக்கூடாது. வெளிநாடுகளுக்கு அடிக்கடி அவா் செல்வதாகக் கூறுகின்றனா். அதற்கு நிறைய சக்தி வேண்டும். அது மோடியிடம் இருப்பதால் செல்கிறாா். உரலுக்கு ஒரு பக்கமும், மத்தளத்துக்கு இரண்டு பக்கமும் இடி என்பா். மோடிக்கு 4 பக்கமும் இடி. அதைப் பொருட்படுத்தாமல் மக்கள் திட்டங்களைத் தொடா்ந்து செயல்படுத்த வேண்டும் என்றாா்.

நிகழச்சியில் மூத்த நிா்வாகிகள் வி.பி.துரைசாமி, கரு.நாகராஜன் உள்பட பலா் பங்கேற்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.