முகப்பு
தமிழ்நாடு

கம்பம் தனியார் வாகன நிறுத்தத்தில் நள்ளிரவில் தீ விபத்து: 15 கார்கள் எரிந்து நாசம்

தேனி மாவட்டம் கம்பத்தில் தனியார் வாகன நிறுத்தத்தில், சனிக்கிழமை அதிகாலை ஏற்பட்ட தீ விபத்தில் 15 கார்கள் எரிந்து கருகியது, மேலும் 10 கார்கள் சேதமடைந்தது. 

Updated On : 13 ஆகஸ்ட் 2022, 10:49 am IST
சனிக்கிழமை அதிகாலை ஏற்பட்ட தீ விபத்தில் 15 கார்கள் எரிந்து கருகியது.
பகிர்:


கம்பம்: தேனி மாவட்டம் கம்பத்தில் தனியார் வாகன நிறுத்தத்தில், சனிக்கிழமை அதிகாலை ஏற்பட்ட தீ விபத்தில் 15 கார்கள் எரிந்து கருகியது, மேலும் 10 கார்கள் சேதமடைந்தது.

தேனி மாவட்டம் கம்பம் மேற்கு தண்ணீர் தொட்டித் தெருவில், கோயில் வளாகத்தில் தனியார் வாகன நிறுத்தகம் உள்ளது,  இங்கு சுமார் 50 வாகனங்கள் வரை நிறுத்தப்படும்.

இங்கு அருகே உள்ள கேரளம் மாநில ஏலக்காய் தோட்டங்களில் வேலை செய்வதற்காக ஆண், பெண் கூலித் தொழிலாளர்களை ஜீப், டாடா சுமோ, பொலிரோ போன்ற வாகனங்கள் மூலம் காலையில் வேலை செய்யும் எஸ்டேட்டில் இறக்கி விட்டு, மாலையில் கம்பம் உள்ளிட்ட பகுதிகளில் இறக்கி விட்ட பின்னர் வாகனங்களை இங்கு நிறுத்துவது வழக்கம்.

Advertisement

Advertisement

இந்நிலையில், சனிக்கிழமை அதிகாலை வாகன நிறுத்தத்தில் கரும்புகை எழும்பியது. தீய்ந்த வாடையுடன் காற்றில் கலந்தது, ஆழ்ந்த உறக்கத்தில் இருந்த அப்பகுதியைச் சேர்ந்த சிலர் எழுந்து பார்த்த போது அதிர்ந்தனர். வாகன நிறுத்தத்தில் தீ மள மளவென எரிந்தது.

இதுகுறித்து கம்பம் தெற்கு காவல் நிலையம் மற்றும் தீயணைப்புத் துறையினருக்கு சிலர் தகவல் தெரிவித்தனர்.

கம்பம் மற்றும் உத்தமபாளையத்தைச் சேர்ந்த தீயணைப்பு மற்றும் மீட்புத் துறையினர் பல மணி நேரம் போராடி தீயை அணைத்தனர். 

இதில், 15 வாகனங்கள் தீயில் கருகி பயன்படுத்த முடியாத நிலையில் இருந்தது, அருகே நிறுத்தப்பட்டிருந்த 10 வாகனங்கள் சேதமடைந்திருந்தது.

கம்பம் தெற்கு காவல் நிலைய போலீசார் வழக்குப் பதிவு செய்து, தீ விபத்து மின்சார கசிவா அல்லது முன் விரோதம் காரணமாக யாராவது செய்திருப்பார்களா என்ற கோணத்தில் விசாரித்தும், அங்குள்ள கண்காணிப்பு கேமராக்களின் பதிவுகளை ஆய்வு செய்து வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments