கோவை சம்பவத்தில் ஈடுபட்டவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்: வைகோ
கோவை கார் குண்டு வெடிப்பு சம்பவத்தில் ஈடுபட்டவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என மதிமுக பொதுச்செயலாளர் வைகோ தெரிவித்தார்.
கிருஷ்ணகிரி: கோவை கார் குண்டு வெடிப்பு சம்பவத்தில் ஈடுபட்டவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என மதிமுக பொதுச்செயலாளர் வைகோ தெரிவித்தார்.
கிருஷ்ணகிரியில் அவர் செய்தியாளரிடம் தெரிவித்தது:
கோவை கார் வெடிப்பு சம்பவத்தில் தமிழக காவல்துறையினர் துரிதமாகச் செயல்பட்டு குற்றவாளிகளை கைது செய்துள்ளனர். தமிழக காவல்துறையினர் மீது குறைகள் சொல்லக்கூடாது. தமிழகத்தில் நிலவிவரும் மத நல்லிணக்கத்தையும், சகோதரத்துவத்தையும் சிதைக்க வேண்டும் என பாஜக முயல்கிறது.
Advertisement
Advertisement
இலங்கை கடற்படையினர் தமிழக மீனவர்களைத் தொடர்ந்து கைது செய்து, அவர்களது படகுகளைப் பறிமுதல் செய்கிறது. இந்த விஷயத்தில் மத்திய அரசு, தமிழக மீனவர்களை இந்திய குடிமக்களாக எண்ணுகிறதா என்ற சந்தேகம் ஏற்படுகிறது.
ஆந்திராவில் தமிழகத்தைச் சேர்ந்த சட்டக்கல்லூரி மாணவர்கள் மீது தாக்குதல் நடத்தியவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். மத்திய அரசு இந்தியை திணிக்க முயல்கிறது.
தமிழ் மொழிக்காக நாங்கள் போராடுகிறோம். இதில் அரசியல் செய்ய வேண்டிய அவசியம் கிடையாது. கேரளம், கர்நாடகம் , ஆந்திரம் போன்ற பல மாநிலங்களில் இந்தி மொழிக்கு எதிராக குரல் எழுப்பத் தொடங்கியுள்ளனர். அவர்களுக்கு ஆதரவாக நாங்களும் குரல் கொடுப்போம் எனத் தெரிவித்தார்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.