மண்ணச்சநல்லூர்: மண்ணச்சநல்லூர் அருள்மிகு பகவதி அம்மன் திருக்கோயில் திருவிழாவில் வெள்ளிக்கிழமை தனலட்சுமி அலங்காரம் செய்யப்பட்டு சிறப்பு பூஜைகள் நடைபெற்றன.
திருச்சி மாவட்டம் மண்ணச்சநல்லூரில் அருள்மிகு பகவதி அம்மன் திருக்கோயில் அமைந்துள்ளது. இத்திருக்கோயிலில் 122 ஆம் ஆண்டு பெருந்திருவிழா டிச.29 ஆம் தேதி கம்பம் நடுதல் விழாவோடு தொடங்கி ஒவ்வொரு நாளும் பல்வேறு அலங்காரத்தில் சிறப்பு பூஜைகள் நடைபெற்று வருகின்றன.
விழாவில் வெள்ளிக்கிழமை அருள்மிகு பகவதி அம்மன் ரூபாய் நோட்டுகளால் அலங்காரம் செய்யப்பட்டு சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. தொடர்ந்து அலங்கார தீபாரதனை மற்றும் அபிஷேக தீபாரதனை நடைபெற்றது. இத்திருவிழாவில் சுற்றுப்புற பகுதிகளில் இருந்து திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.