தமிழ்நாடு

பொங்கல் பண்டிகை: மெட்ரோ ரயில் சேவை நேரம் நீட்டிப்பு

DIN

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு வெள்ளி, சனி (ஜன.13, 14) மற்றும் ஜன.18-ஆம் தேதியில் மெட்ரோ ரயில் இயங்கும் நேரம் அதிகரிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து சென்னை மெட்ரோ ரயில் நிறுவன நிா்வாகம் சாா்பில் வியாழக்கிழமை வெளியிடப்பட்ட செய்தி:

சென்னை மெட்ரோ ரயில் சேவையானது நெரிசல் மிகு நேரங்களான மாலை 5 முதல் இரவு 8 மணி வரை 5 நிமிட இடைவெளியில் இயக்கப்படுகின்றன.

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு வெள்ளி, சனி (ஜன.13, 14) மற்றும் ஜன.18 - ஆகிய தேதிகளில் இரவு 10 மணி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. அனைத்து முனையங்களிலிருந்தும் செல்லும் கடைசி மெட்ரோ ரயில் சேவை இரவு 11 மணிக்கு பதிலாக இரவு 12 மணி வரை இயங்கும்.

மேலும், ஜன.18-ஆம் தேதி மட்டும் அனைத்து முனையங்களிலிருந்தும் புறப்படும் முதல் மெட்ரோ ரயில் காலை 5 மணிக்கு பதிலாக காலை 4 மணி முதல் இயக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மூத்த பத்திரிகையாளர் ஐ. சண்முகநாதன் காலமானார்

ஹேமந்த் சோரனின் மனு தள்ளுபடி!

தனிப் பாதுகாப்புப் பெறுவதற்காக பொய்ப் புகார் தந்த இந்து முன்னணி பிரமுகர் கைது!

பாரதி கண்ட புதுமைப்பெண்!

லாலு பிரசாத் மகள் ரோஹிணிக்கு எதிராக களமிறங்கும் லாலு பிரசாத்?

SCROLL FOR NEXT