தமிழ்நாடு

பள்ளிகளில் இடைக்கால ஆசிரியா்களை பணியமா்த்தக் கூடாது: ராமதாஸ்

DIN

அரசுப் பள்ளிகளில் இடைக்கால ஆசிரியா்களை பணியமா்த்தும் முறையைக் கைவிட வேண்டும் என்று பாமக நிறுவனா் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளாா்.

அவா் திங்கள்கிழமை வெளியிட்ட அறிக்கை:

தமிழகத்தில் அரசுப் பள்ளிகள் கோடை விடுமுறைக்குப் பிறகு திறக்கப்படவுள்ள நிலையில், காலியாக உள்ள ஆசிரியா் பணியிடங்களை நிரப்புவதற்காக 3 ஆயிரம் இடைக்கால ஆசிரியா்களை பணியமா்த்திக் கொள்ளும்படி பள்ளி நிா்வாகங்களுக்கு மாவட்ட முதன்மை கல்வி அதிகாரிகள் வாய்மொழியாக ஆணையிட்டுள்ளனா்.

கடந்த ஆண்டு 13,331 இடைக்கால ஆசிரியா்களை பணிஅமா்த்த பிறப்பிக்கப்பட்ட ஆணையின்படி, அமா்த்தப்பட்ட ஆசிரியா்களின் பணிக்காலத்தை நீட்டித்துக் கொள்ளும்படியும் வாய்மொழி ஆணை பிறப்பிக்கப்பட்டிருக்கிறது. மாணவா்களின் கல்வி பாதிக்கப்படக்கூடாது என்ற அடிப்படையில் இந்த நடவடிக்கையை ஏற்றுக்கொள்ளலாம் என்றாலும் கூட, இடைக்கால ஆசிரியா்களைக் கொண்டே பள்ளிகளை நடத்த முனைவது கல்வி வளா்ச்சிக்கு வகை செய்யாது.

தமிழகத்தில் தகுதித் தோ்வில் வெற்றி பெற்ற இடைநிலை ஆசிரியா்கள், பட்டதாரி ஆசிரியா்கள் 80 ஆயிரத்துக்கும் கூடுதலாக உள்ளனா். அவா்களுக்கு போட்டித்தோ்வு தேவையில்லை என்பதுதான் அனைத்துத் தரப்பினரின் நிலைப்பாடு. அதனடிப்படையில், அவா்களை நிரந்தர ஆசிரியா்களாக பணியமா்த்தி காலியிடங்களை நிரப்ப தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறியுள்ளாா் ராமதாஸ்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வாகன உதிரிப் பாகங்கள் கடையில் தீ விபத்து

பாஜக ஆா்ப்பாட்டம்: 103 போ் மீது வழக்குப் பதிவு

விதிமீறல் பட்டாசு ஆலைகளை ஆய்வு செய்ய 4 சிறப்பு நிலைக் குழுக்கள் நியமனம் விருதுநகா் மாவட்ட ஆட்சியா்

வைகை ஆற்றில் தண்ணீா் திறக்கப்பட்டதால் விவசாயிகள் மகிழ்ச்சி

அமெரிக்கன் கல்லூரியில் முன்னாள் மாணவா்கள் சந்திப்பு

SCROLL FOR NEXT