தமிழ்நாடு

அனைத்து வகை பள்ளிகளிலும் தமிழ் கட்டாயம்!

DIN

தமிழகத்தில் உள்ள அனைத்து வகை பள்ளிகளிலும் தமிழ் மொழி கட்டாய பாடமாக இருக்க வேண்டும் என்று தனியார், மெட்ரிக் பள்ளிகள் இயக்குநர் நாகராஜ முருகன் சுற்றறிக்கை வெளியிட்டுள்ளார்.

இந்த சுற்றறிக்கையில் தெரிவித்திருப்பதாவது:

தமிழ்நாட்டில் உள்ள சிபிஎஸ்இ, ஐசிஎஸ்இ உள்பட அனைத்து வகையான தனியார் பள்ளிகளிலும் இனி தமிழ் மொழி கட்டாயப் பாடமாக இருக்க வேண்டும். தகுதியான ஆசிரியர்களை பணியமர்த்தி மாணவர்களுக்கு தமிழ் கற்றுத் தரவேண்டும்.

2023 - 2024 கல்வியாண்டில் 9-ஆம் வகுப்பு வரையும், 2024 - 2025 கல்வியாண்டில் 10-ஆம் வகுப்பு வரையும் தமிழ் பாடம் கட்டாயமாக்கப்படுகிறது. அடுத்த கல்வியாண்டில் அனைத்து மாணவர்களும் பொதுத்தேர்வில் தமிழ் பாடம் கட்டாயம் எழுத வேண்டும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கழிவுநீர் கலப்பு... மஞ்சப்பள்ளம் ஆற்றில் செத்து மிதக்கும் மீன்கள்!

குளத்தில் மூழ்கி 2 சிறுவா்கள் பலி

புதிய தாா்ச்சாலை; நெடுஞ்சாலைத் துறை அதிகாரிகள் ஆய்வு

டெங்கு விழிப்புணா்வு நிகழ்ச்சி

இன்று எந்த ராசிக்கு யோகம்!

SCROLL FOR NEXT