முகப்பு
தமிழ்நாடு

மோடியின் குடும்பம் இந்தியா; வீடு செங்கோட்டை: கார்கேவுக்கு தம்பிதுரை பதில்

பிரதமர் நரேந்திர மோடி அடுத்தாண்டு வீட்டில்தான் கொடியேற்றுவார் என்று காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கேவின் கருத்துக்கு அதிமுக எம்பி தம்பிதுரை பதிலளித்துள்ளார்.

Updated On : 16 ஆகஸ்ட் 2023, 9:24 am IST
தம்பிதுரை(கோப்புப்படம்)
பகிர்:

பிரதமர் நரேந்திர மோடி அடுத்தாண்டு வீட்டில்தான் கொடியேற்றுவார் என்று காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கேவின் கருத்துக்கு அதிமுக எம்பி தம்பிதுரை பதிலளித்துள்ளார்.

தில்லி செங்கோட்டையில் செவ்வாய்க்கிழமை கொடியேற்றிய பிறகு பேசிய பிரதமர் மோடி, மக்களின் நம்பிக்கையைப் பெற்று அடுத்த ஆண்டு சுதந்திர தின விழாவின்போது செங்கோட்டையில் இருந்து உரையாற்றுவேன் என்றார்.

இதனை விமர்சித்த கார்கே, பிரதமரின் இந்த கருத்து ஆணவத்தை வெளிக்காட்டுவதாகவும்; அடுத்த ஆண்டு மோடி தனது வீட்டில்தான் தேசியக் கொடி ஏற்றுவாா் என்றும் கூறினாா்.

Advertisement

Advertisement

இந்நிலையில், அதிமுக எம்பி தம்பிதுரை செய்தியாளர்களிடம் இன்று பேசுகையில்,

“பிரதமர் மோடிக்கு குடும்பம் இல்லை. அவரின் குடும்பம் இந்தியாதான். செங்கோட்டைதான் அவரது வீடு. அதனால், அடுத்தாண்டு அவரது வீட்டில் கொடியேற்றுவார் என்று கார்கே கூறியது சரிதான்.” என்று தெரிவித்துள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments